148
யுருவ வான்மதி யூர்கொண் டாங்குக்
கூருளி பொருத வடுவாழ் நோன்குறட்
டாரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியொடு
சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத்
255ததர்பிணி யவிழ்ந்த தோற்றம் போல.
வுள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக்
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
யூர்ந்துபெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு
மாசெல வொழிக்கு மதனுடை நோன்றாள்
260வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ
யன்றே விடுக்குமவன் பரிசின் மென்றோட்
டுகிலணி யல்குற் றுளங்கியன் மகளி
ரகிலுண விரித்த வம்மென் கூந்தலின்
மணிமயிற் கலாப மஞ்சிடைப் பரப்பித்
265துணிமழை தவழுந் துயல்கழை நெடுங்கோட்
டெறிந்துரு மிறந்த வேற்றருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச்
செல்லிசை நிலைஇய பண்பி
னல்லியக் கோடனை நயந்தனிர் செலினே.

"பானிலா வெண்கதிர்" (சிலப். 13 : 27); "தீம்பால் கதிர்மணிக் குடத்தினேந்தி, வீழ்தரச் சொரிவ தேபோல் விளங்கொளித் திங்கட் புத்தேள், சூழிருட் டொழுதி மூழ்கத் தீங்கதிர் சொரிந்து" (சீவக. 1541); "பானிலாவை" (தக்க. 605)

254 - 5."சிதவற் றுணியொடு சேணோங்கு நெடுஞ்சினைத், ததர் வீழ் பொடித்து" (மணி. 3 : 106 - 7)

260."பொற்றார் புனைந்த புள்ளியற் பாண்டில்", "பாண்டில் வையம்" (பெருங். 1. 36 : 32 ; 3 . 5 : 65)

263."அகிலுண விரிந்த வம்மென் கூந்தல்" (சிலப். 28 : 17); "அகிலுண விரிந்த கூந்த லாய்ச்சியர்,' (பாகவதம். 10. 19 : 18)

263 - 4. 14-5, ந. குறிப்புரையைப் பார்க்க.

267. கொய்தளிர்க்கண்ணி: "கொய்தார மார்பினெங் கோ", "கொய்தார மார்பிற் கொழுநன்" (பு. வெ. 95, 278)

268."நல்லிசை தம்வயி னிறுமார் வல்வேல், வான வரம்ப னன்னாட் டும்பர்" (அகநா. 389 : 15 - 6)