| |  | வெந்தெறற் கனலியொடு மதிவலந் திரிதருந் தண்கடல் வரைப்பிற் றாங்குநர்ப் பெறாது
 பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
 |  | 20 | பழுமரந் தேரும் பறவை போலக் கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்
 புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண
 பெருவறங் கூர்ந்த கானங் கல்லெனக்
 கருவி வானந் துளிசொரிந் தாங்குப்
 |  | 25 | பழம்பசி கூர்ந்தவெம் மிரும்பே ரொக்கலொடு வழங்கத் தவாஅப் பெருவள னெய்தி
 வாலுளைப் புரவியொடு வயக்களிறு முகந்துகொண்
 | 
 
 
  17. (பி-ம்.) ‘வெங்கதிர்க்கனலி', ‘வெந்திறற்கனலி' வெந்தெறற்கனலி: "தெறுகதிர்க் கனலி வெம்மை"(புறநா. 43 : 2)  18.  (பி-ம்.) ‘தண் கடல் வயத்து'தாங்குநர்ப்பெறாது: "புரவலரின்மையின்"(புறநா. 69 : 2)  17 - 8. முக்காலத்துமுள்ள இயல்பையுடைய பொருளை நிகழுங்காலத்து மெய்ந்நிலைப் பொதுச் சொல்லாற் சொல்லவேண்டும்(தொல். வினை. சூ. 43,ச ந: இ-வி. சூ. 303) என்பதற்கு மேற்கோள்.  20. பொருந.  64-ம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.  21. கல்லென் சுற்றம்: "கல்லென் சுற்றக் கடுங்குரல்"(குறிஞ்சிப். 151)' "வரிசை யறியாக் கல்லென் சுற்றம்", "கல்லென் சுற்றமோடு கையழிந்து"(புறநா. 184 : 8 . 240 : 12)  22. புல்லென்யாக்கை: "நின்னினும் புல்லியே மன்னே"(புறநா.  141 : 8)  24.  (பி-ம்) ‘தளி சொரிந்தாங்கு' "கருவி மாமழை கனைபெயல் பொழிந்தென"(சீவக. 2752)  23 - 4. "கார்பெற்ற புலமேபோற் கவின்பெறும்"(கலித். 38 : 12); "நெடுவேனில் சுடச்சுட நின்றுலறிக், கார்வந்து தொடத்தொட வுய்ந்திளகுங் காடொத்தனன்"(தக்க. 200); "காரிற் குளிர்ந்து குழைந்தசெழுங் கானம் பூத்த தெனக்கவினி" (வி. பா. 12-ஆம் போர். 82)  26. (பி-ம்.) ‘என்னிரும்பேர்'"ஆடுபசி யுழந்தநின் னிரும்பே ரொக்கலொடு"(பொருந.  61);  புறநா. 370 : 3-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. |