395

அவிர் துகில் முடித்து (494)-விளங்குகின்ற1மயிர்க்கட்டுக்கட்டி,

499. செம்மை சான்ற காவிதி மாக்களும்-தலைமையமைந்த2காவிதிப்பட்டங்கட்டின அமைச்சரும்,

500. அறன் நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி-இல்லறத்திற்குக் கூறிய வழியைத்தப்பாமல் இல்லறத்திலே நடந்து,

501. குறு பல் குழுவின் குன்று கண்டன்ன-அண்ணிய பல திரட்சியையுடைய மலைகளைக் கண்டாற்போன்ற,

502. பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல்-பருந்து இளைப்பாறியிருந்து பின்பு உயரப்பறக்கும் பலதொழிலின் மாட்சிமைப்பட்ட நல்ல இல்லில்,

503. பல் வேறு பண்டமொடு ஊண் மலிந்து கவினி-பலவாய் வேறுபட்ட பண்டங்களோடே பலவுணவுகளும் மிக்கு அழகுபெற்று,

504. மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்-மலையிடத்தனவும் நிலத்திடத்தனவும் நீரிடத்தனவும் பிற இடத்தனவுமாகிய பண்ணியம் (506),

505. பல் வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு-பலவாய் வேறுபட்ட அழகினையுடைய மணிகளையும் முத்தினையும் பொன்னையும் வாங்கிக்கொண்டு,

506. சிறந்த தேஎத்து-மணிகளும் முத்தும் பொன்னும் பிறத்தற்குச் சிறந்த தேசத்தினின்றும் வந்த,

பண்ணியம் பகர்நரும்-பண்டங்களை விற்கும் வணிகரும்,

ஊண்மலிந்து கவினிக் (503) குன்றுகண்டன்ன (501)நல்லஇல்லிலே யிருந்து (502) ஆற்றினொழுகிச் (500) சிறந்ததேஎத்துவந்த (506) திருமணி முத்தமொடு பொன்கொண்டு (505) பிறவுமாகிய (506) பண்டங்களை விற்பாருமென்க.

507. [மழையொழுக் கறாஅப் பிழையா விளையுள் :] அறாஅ ஒழுக்கு மழை பிழையா விளையுள்-இடைவிடாமற் பெய்கின்ற மழையால் தவறாத விளைதலையுடையதாகிய மோகூர் (508),


1 மயிர்க்கட்டு-தலைப்பாகை ; முல்லை. 53, ; சீவக. 1558, ந.

2 காவிதிப்பட்டம் : "பாண்டிநாட்டுக் காவிதிப்பட்டம் எய்தி னோரும் ............... முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்கு மகட்கொடைக்கு உரிய வேளாளராம்" (தொல். அகத். சூ. 30, ந.) என்பதனால் இப்பட்டம் உயர்ந்த வேளாளர் பெறுவதென்பதும், "காவிதிப்பூ" (தொல். தொகை. சூ. 12, ந. மேற்.) என்பதனால் இப்பட்டத்தினரணியும் பூவொன்றுண்டென்பதும், "எட்டி காவிதிப் பட்டந்தாங்கிய, மயிலியன் மாதர்" (பெருங். 2. 3:144-5) என்பதனால் இப்பட்டம் மகளிரும் பெறுதற்குரியதென்பதும் அறியப்படுகின்றன.