431

நாளுமென்பதனைப் பின்னேகூட்டுக.

மணங்கமழ்தேறலென்றதனாற் காமபானமாயிற்று.

781-2. [இனிதுறைமதி பெரும, வரைந்துநீபெற்ற நல்லூழியையே:] பெரு நல் ஊழியை வரைந்து நீ பெற்றநாளும் இனிது உரைமதி-பெருமானே! நன்றாகிய ஊழிக்காலத்தைஇத்துணைக்கால மிருத்தியெனப் 1பால்வரைதெய்வத்தாலேவரையப்பட்டு நீ அறுதியாகப்பெற்ற நாள்முழுதும் இனிதாகஇருப்பாயென்க.

நல்லூழியென்றார், கலியூழியல்லாதஊழியை.

உம்மை : முற்றும்மை.

உயர்ந்தோர் மருகனே (23) நெடியோனும்பலே(61) பொருநனே (42) கொற்றவனே (88) வெல்கோவே (105)புகழ்வேந்தே (130) நசைப்பொருநனே (138) போரேறே (144)குருசிலே (151) நீகொற்றவர்தங்கோனாகுவை (74) வாய்நட்பினை(198) பணிந்தொழுகலை (201) பழிநமக்கெழுகவென்னாய்(204) இசைவேட்குவை (205) அன்னாய் (206) நின்கொற்றம்(194) பிறையிற் (193) சிறக்க (194) நின்தெவ்வராக்கம்(196) மதியிற் (195) கெடுக (196) நின்நல்லிசை கெடாதுநிலைஇயர்(209) இனி நீ பாடல்சான்ற நன்னாட்டு நடுவணதாய் (331)இருபெருநியமத்து (365) நாளங்காடிக்கம்பலை (430)நாடார்த்தன்றேயாய் (428) அல்லங்காடி அழிதருகம்பலை(544) புள்ளினிசை யெழுந்தற்றேயாய் (543) ஞாயிறு (546)குன்றஞ்சேருகையினாலே (547) மாலை (558) புகுந்து (557)பின்னர் நீங்க (558) முந்தையாமஞ் சென்றபின்றை(620) மற்றைப் (653) பானாட்கொண்டகங்குல் (631) யாமத்தையும்மற்றை (653) இடையதாகிய (631) கடவுள்வழங்குங்கங்குல்(651) யாமத்தையும் பகலுறக்கழிப்பிப் (653) பாடப் (656)பண்ணக் (658) கைப்பத் (659) தெவிட்ட (660) உறுப்ப (661) நுவலக்(662) கரையத் (667) தோன்ற (669) வாழ்த்த நுவல (670) இசைப்ப(671) இரங்கச் சிலைப்ப (672) இயம்பக் (673) கரைய அகவ(675) முழங்கக் (676) குழுமச் (677) சீப்ப (685) இராக்காலம்தன்னிடத்தினின்றும்போகின்ற வைகறையிலே (686)வளங்கெழு தாரத்தோடே (697) யானையும் (688) புரவியும்(689) ஆயமும் (692) தோட்டியும் (693) கலமுமனைத்தும் (659)கங்கையாறுகடற்படர்ந்தாங்கு (696) அளந்து கடையறியாத(697) கவினிப் (698) புகழெய்திய (699) பெரும்பாணிருக்கையினையும்(342) கிடங்கினையும் (351) புரிசையினையும் (352)வாயிலினையு (356) முடைய நான்மாடத்தான் மலிந்தபுகழைக்கூடுதலையுடைய (429) மதுரை


1."பால்வரை தெய்வமென்றார்இன்ப துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையும்வகுத்தலின்" (தொல். கிளவி. சூ. 58, ந. )