433

புலவர் செய்யு ளுறுப்பு" (தொல். செய். சூ. 1.) எனத் தொல்காப்பியனார் கூறினமையின், இவரும் நல்லிசைப்புலவராதலின், இங்ஙனம் செய்யுள் செய்தாரென்றுணர்க.

1தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடிய மதுரைக்காஞ்சிக்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று.

வெண்பா

1பைங்க ணிளம் 2பகட்டின் மேலானைப் பான்மதிபோல்
திங்க ணெடுங்குடையின் கீழானை- 3அங்கிரந்து
4நாம்வேண்ட நன்னஞ்சே நாடுதிபோய் நானிலத்தோர்
தாம்வேண்டுங் கூடற் றமிழ்.

25சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும்
நல்லிருந் தீந்தாது நாறுதலால்-மல்லிகையின்
வண்டார் கமழ்தாம மன்றே 6மலையாத
தண்டாரான் கூடற் றமிழ்.

1 (பி-ம்.) ‘பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்'

2 (பி-ம்.) ‘பகட்டுமேலானை' 3 (பி-ம்.) ‘தங்காது'

4 (பி-ம்.) ‘நாம்வேண்டு'

5 "பழுதகன்ற நால்வசைச்சொன் மலரெடுத்து" (திருவிளை. பாயிரம், 12)

6 மலையாத தண்தாரன்-ஏனையோர்களாலணியப்படாத ஆரத்தைப் பூண்டவன் ; என்றது இந்திரனால் தரப்பட்ட ஆரமணிந்ததைக் குறிப்பித்தபடி ; "செங்கணா யிரத்தோன் றிறல்விளங் காரம், பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி", "தேவ ரார மார்பன்" (சிலப். 11:24-5, 29 : "கந்துகவரி")