434

ஏழாவது

1 நெடுநல்வாடை

 

வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
வார்கலி முனை இய கொடுங்கோற் கோவல
ரேறுடை யினநிரை வேறுபுலம் பரப்பிப்
5புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோட
னீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
மாமேயன் மறப்ப மந்தி கூரப்
10புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோட
னீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
மாமேயன் மறப்ப மந்தி கூரப்

1. வலனேர்பு : முல்லை. 4-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

3. கொடுங்கோற் கோவலர் : முல்லை. 15- ஆம் அடியையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.

4. ஏறுடை யினநிரை : "வேறுபுலம் படர்ந்த வேறுடை யினத்த, வளையான்" (மலைபடு. 408-9); "ஏறுடை யினத்துப், புல்லூர் நல்லான்" (குறுந். 275 : 3-4) ; " ஏறுடை யினநிரை" (அகநா. 269 :3) ; " ஏறு பொருந்திய பசுநிரை" (பு. வெ. 5, உரை) ;" பாலெடுத்தபொற் குடநிகர் மடியின பருவச், சூலெ டுத்தநல் வயிற்றின மழவிடை தொடர்வ" (வி.பா.நிரைமீட்சி. 57)

5. (பி - ம்.)‘புலம்பிற்கலங்கி '

9. " விலங்குகள் மேயாமையின், வாயிழந்தன ; ‘மாமேயன் மறப்ப' என்றார் பிறரும்" (சீவக.1158, ந.) ; மந்திகூர : கைந்நிலை, 36 ; கம்ப. கார்கால 76.

12. முசுண்டை புதலில் மலர்தல் : அகநா. 163 : 9.

13. புன்கொடி முசுண்டை : மலைபடு. 101.

12 - 3. கூதிர்ப்பானாளில் முசுண்டை மலர்தல் ; அகநா. 94:1-3, 264 : 1 - 2.

14. பீரத்திற்குப் பொன் உவமை : " பொன்புனை பீரத் தலர்", " பொன்னென, இவர்கொடிப் பீர மிரும்புதன் மலரும்" (ஐங். 452 : 5, 464 : 1 - 2)

1 இதனைப் பெருந்திணையென்பர் பு. வெ. உரையாசிரியர் ; பு. வெ. 284.