601
நெடுவரை யிழிதரு நீத்தஞ்சா லருவிக்
555கடுவரற் கலுழிக் கட்கின் சேயாற்று
வடுவா ழெக்கர் மணலினும் பலரே
அதனால், புகழொடுங் கழிகநம் வரைந்த நாளெனப்
பரந்திடங் கொடுக்கும் விசும்புதோ யுள்ளமொடு
நயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரி
560துவந்த வுள்ளமோ டமர்ந்தினிது நோக்கி
யிழைமருங் கறியா நுழைநூற் கலிங்க
மெள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ
முடுவ றந்த பைந்நிணத் தடியொடு
நெடுவெ ணெல்லி னரிசிமுட்டாது
565தலைநா ளன்ன புகலொடு வழிசிறந்து
பலநா ணிற்பினும் பெறுகுவிர் நில்லாது
செல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தென
மெல்லெனக் கூறி விடுப்பி னும்முட்
டலைவன் றாமரை மலைய விறலியர்
570சீர்கெழு சிறப்பின் விளங்கிழை யணிய

 555. கட்கின் சேயாறு : (மலைபடு. 476)

556. மதுரைக். 236, குறிப்புரை. சிலப். 28 : 125 - 6.

559 - 60. "யாந்தன் னறியுந மாகத் தான்பெரி, தன்புடை மையினெம்பிரி வஞ்சி" (புறநா. 381 : 6 - 7)

561. பொருந. 82 - 3, குறிப்புரை.

563. மலைபடு. 177.

566. குறிஞ்சிப். 238, குறிப்புரை ; "தலைநாள் விழைவொடு" (வி - பா. குருகுல. 79)

565 - 6."பலநாள் பயின்று பலரொடு செல்லினுந், தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ" (புறநா. 101 : 2 - 3"பன்னாளுஞ் சென்றக்காற் பண்பிலார் தம்முழை, யென்னானும் வேண்டுப வென்றி கழ்ப - வென்னானும், வேண்டினு நன்றுமற் றென்று விழுமியோர், காண் டொறுஞ் செய்வர் சிறப்பு" (நாலடி. 159) 

567 - 8. பொருந. 121 - 2.

569. பாணன் பொற்றாமரை சூடுதல் : (பொருந. 159 - 60, குறிப்புரை.)

569 - 70. விறலியர் இழை பெறுதல் : " வசையின் மகளிர் வயங்கிழை யணிய " (பதிற். 12 : 23)

பாணன் பொற்றாமரை பெறுதலும் விறலி இழைபெறுதலும் : பொருந. 159 - 62, குறிப்புரை.