1 - திருமுருகாற்றுப்படை கண்ணியினையும் கோதையினையும் சேர்த்தின கூந்தலினையும் மட1நடையினையுமுடைய மகளிரென்க. இம்மகளிர் தன்னைச் சேவிக்கு மகளிர். 206. செய்யன் - சிவந்தவன், 206-7. சிவந்த ஆடையன் செ அரை செயலை தண் தளிர் துயல் வரும் காதினன் - சிவந்த ஆடையுடுத்துச் சிவந்த அரையினையுடைய அசோகிற் குளிர்ந்த தளிர் அசையுங்காது பொருந்தி, 208. கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன் - கச்சைக் கட்டிக் கழலையணிந்து வெட்சிமாலையைச் சூடி, 209. குழலன் கோட்டன் 2குறு பல்லியத்தன் - குழலையூதிக் கொம்பைக் குறித்துச் சிறிய பல்லியங்களை எழுப்பி, 210 - 11. தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவலங்கொடியன் - கிடாயைப் பின்னிட்டு மயிலையேறிக் குற்றமில்லாத கோழிக்கொடியை உயர்த்து, நெடியன் - தான் வேண்டிய வடிவுகோடலிற் பிள்ளையாயிராது3நெடுக வளர்ந்து, தொடி அணி தோளன் - தோளிலேதொடியையணிந்து, 212. நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு - நரம்பு ஆரவாரித்தாலொத்த இனிய மிடற்றையுடைய பாடு மகளிரோடே, இவர்கள் தன்னைச் சேவித்துப்பாடும் மகளிர். 213 - 4. [ குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல், மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்:] மருங்கில் கட்டிய குறும்பொறி கொண்ட - இடையிலே இறுகக் கட்டிய உதரபந்தத்தின் மேலே உடுப்பதாக உட்கொண்ட, 4நிலன் நேர்பு நறு தண் சாயல் துகிலினன் - நாலவிட்டமையால் நிலத்தைப் பொருந்தி நறிய குளிர்ந்த மென்மையை உடைத்தாகிய துகிலினையுடுத்து, 215 - 6. [ முழுவுறழ் தடக்கையி னியல வேந்தி, மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து :]
1. மகளிர் நடைக்கு மயிலின் நடையை உவமை கூறுதலும் பண்டையாசிரியர் வழக்கம்; முருகு. 205-ஆம் அடியின் அடிக் குறிப்பைப் பார்க்க. 2. நெடும்பல்லியத்தனாரென்று ஒரு நல்லிசைப் புலவரின் பெயர் பழையநூல்களிற் காணப்படுகிறது ; இயங்கள் குறும்பல்லியம் நெடும் பல்லியமென இருவகைப்படுவனபோலும். 3. "வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்தி" (முருகு. 288) 4 "நிலந்தோய் புடுத்த நெடுநுண் ணாடையர்" (பெருங். 1-32 : 64)
|