நள்ளிருள் (195) வைகினிர்விரிந்த விடியல் கழிமின் (196) ; கழிந்துசெப்பந்துணியின் (197) வலஞ் செயாக்கழிமின் (202) ; கழிந்துகுறவர் (203) ஏறித் (204) தளர்க்குங்கல் (206)கூற்றத்தன்ன (209) ; அவைதாம் இரியத் (208) தத்தி (207)விசை தவிராது வரும் ; அதற்கு மர மறையாக்கழிமின்(210) ; கழிந்து கான்யாற்று நடவை (214) வழூஉம்மருங்குடைய (215) ; அவ்விடத்திற்கு வலந்த பரூஉக்கொடிமதலைபற்றி (216) வழாலோம்பி (215)ஒருவிரொருவிரோம்பினிர் கழிமின் (218) ; கழிந்துநுண்ணீர்ப்பாசிவழும்பு (221) அடிநிலை தளர்க்குமருப்பமுமுடைய (222) ; அதற்கு வேரலோடு (223) மென்கோல்பற்றினிர்கழிமின் (224) ; கழிந்து கடவுட்காணின்(230) வெற்பு மாரிதலையு (233) மாதலின்,நும்மியந்தொடுத லோம்புமின் (232) ; ஓம்பிமஞ்ஞைதளரினும் (235) கடுவன் உகளினும் (237)பிரசங்காணினும் (239) ஞெரேரென நோக்கலுரித்தன்று(240) ; நெறிமாறுபடுகுவிர் (241) ; அங்ஙனம் நெறிமாறுபடாமற்போய்க் கானத்துப்படின் (242)ஏனங்காணின் (247) மிசைந்து (249) பருகிப் (251)பொதியினிராய் (252) மகாரோடே (253) கழிதலோம்பிஅற்குக் (254) கல்லளைவதிமின் (255) ; வதிந்துவிடியலெழுந்து (257) செந்நெறிக்கொண்மின் (258) ;கொண்டு விலங்கி (261) நோக்கிக் (262)குறுகாதுகழிமின் (267) ; கழிந்து நாடுகாணனந்தலைமென்மெல அகன்மின் (270) ; அகன்று குன்றத்துப்படின்(275) இயந்தொடுமின் (277) ; தொட்டால் கானவருளர் (279); அவரெய்திக் (281) காட்டி (283) முந்துற (284)இனியிராகுவிர் (286) ; அங்ஙனமினியிராய் அவர்கூறிய மாதிரங்கைக் கொண்டு (287) இழிந்து (288)இருப்பின் (290) மலைபடுகடாம் (348) பலதிறம்பெயர்பவை கேட்குவிர் (291) ; கேட்டபின்அவன்வெற்பு விழவினற்று (351) ; ஆண்டுத் தொன்முறைமரபினிராகிப் (355) பாடிப் (359) பழிச்சி (360)மலைபிற்படக் (357) கழிமின் (360) ; கழிந்து துவலைதுவற்றலின் (363) விடரகம் புகுமின் (366) ; புகுந்துகுன்றில் ஆரிடரழுவத்து (368) ஊறு தவப்பல (372) ;அவற்றைக் கோல்கொண்டு (370) ஊன்றினிர்கழிமின்(372) ; கழிந்து இன்னலியக்கத்து (374)அமயத்துக்கழிமின் (375) ; கழிந்து அவ்விடம்அருப்பமுமுடைய (378) ; அவ்வரண்களிற் போயின்நுழைதொறும் (379) கைபிணிவிடாதுகழிமின் (383) ;கழிந்தாற் கானம்பல (385) ; கல் நட்ட (388)கவலைகள்பல (389) ; அக்கல்லிற்கு மருப்பிகுத்துத்துனைமின் (391) ; அப்பொழுது புதுவிர் (392)புன்முடிந்திடுமின் (393) ; இட்டுப்போனாற்சுரந்தவப்பல (398) ; ஓம்பாவள்ளற்படர்ந்திகுமெனின் (400) நம்மனோர்க்கு ஆங்கனம்(402) மூதூர் (401) அற்று (402) ; அசைவுழியசைஇ அஞ்சாதுகழிமின் (403) ; அக்கானத்தையிறந்து (405) கோவலர்பாலைச் (409) சொரிகையினாலே (410) அவர்க்குவிருந்தாவிர் (412) ; அங்ஙனம் விருந்தாய் ஆட்டின்நிரையிலேபுகிற் (416) பாலும் மிதவையும் பெறுகுவிர் (417) ;
|