67

1 - திருமுருகாற்றுப்படை

221. 1ஆர்வலர் ஏத்த மே வரு நிலையினும் - தன்மேல் அன்புடையார் ஏத்துதலாலே தன் மனம் பொருந்துதல் வருகின்ற இடத்தினும்,

222. வேலன் தைஇய வெறி அயர் களனும் - படிமத்தான் இழைத்த வெறியாடுகளத்தினும்,

பிள்ளையார் வேலைத் தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின், வேலனென்றார்; இது, "வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்" (தொல். புறத், சூ. 5) எனப் புறத்திற்கும் கூறியது.

223. காடும் காவும் கவின் பெறு துருத்தியும் - காட்டினும் பொழிலினும் அழகுபெறுகின்ற ஆற்றிடைக்குறையினும்,

224. யாறும் குளனும் - ஆறுகளினும் குளங்களினும்,

வேறு பல் வைப்பும் - முற்கூறிய ஊர்களன்றி வேறுபட்ட பலவாகிய ஊர்களினும்,

225. சதுக்கமும் - நாற்சந்தியினும்,

சந்தியும் - முச்சந்தியினும் 2ஐஞ்சந்தியினும்,

புது பூ கடம்பும் - புதிய பூக்களையுடைய கடம்பினும்,

226. மன்றமும் - ஊர்க்குநடுவாய் எல்லாருமிருக்கும் மரத்தடியினும் ;

3பொதியிலும் - அம்பலத்தினும்,

4கந்து உடை நிலையினும் - ஆதீண்டு குற்றியையுடைய இடத்தினும்,

227. [ மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவர :] மாண் தலை கொடியொடு உரு கெழு வியனகர் (244) அமைவர மண்ணி - மாட்சிமைப்பட்ட தலைமையினையுடைய கோழிக்கொடியோடே உருகெழு வியனரை அமைவரப் பண்ணி,

ஒடு : வேறுவினையொடு.

இனி, 5‘ஆண்டலைக்கொடி' என்று பாடமாயின், பேய்முதலியன


1. ஆர்வலர் - ஒன்றற்குறையுடையார் (வேறுரை)

2."சந்தி யைந்துந் தம்முடன் கூடி, வந்துதலை மயங்கிய வான்பெரு மன்றத்து" (சிலப். 10 : 19-20); "காளத்தி, வருமைஞ் சந்தி மழை மத யானையே" (சீகாளத்தி. காப்பு.)

3. பொதியமலை யென்பாருமுளர் (வேறுரை)

4. யானைத் தறியிடத்தினும்; பசுமுதலானவை உரிஞ்சுதறி யெனினுமமையும் (வேறுரை)

5. ஆண்டலைக் கொடி - மயிற்கொடி (வேறுரை)