82
9பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் - பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல்
ஆசையா னெஞ்சே யணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல்.
10நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாடோறுஞ் சாற்றினால் - முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தானினைத்த வெல்லாந் தரும்.

பின்னருள்ள கட்டளைக்கலித்துறை, திருமுருகாற்றுப்படையை நியமமாகப் பாராயணஞ் செய்யுங்காலத்துப் பெரியோர்களால் தொன்று தொட்டு ஓதப்பெற்று வருகின்றது.

"ஒருமுரு காவென்ற னுள்ளங் குளிர வுவந்துடனே
வருமுரு காவென்று வாய்வெரு வாநிற்பக் கையிங்ஙனே
தருமுரு காவென்று தான்புலம் பாநிற்பத் தையன்முன்னே
திருமுரு காற்றுப் படையுட னேவருஞ் சேவகனே."

"வளவாய்மை சொற்ப்ரபந்த முளகீர னுக்குகந்து மலர்வாயிலக் கணங்க ளியல்போதி, அடிமோனை சொற்கிணங்க வுலகாமு வப்பவென்று னருளா லளிக்குகந்த பெரியோனே", "மருகு மாமது ரைக்கூடன் மால் வரை வளைவுளாகிய நக்கீர ரோதிய வளமை சேர்தமி ழுக்காக நீடிய கர வோனே", "கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு கீரரியல் கேட்ட க்ருபைவேளே" (திருப்புகழ்), "நக்கீரர் சொற்றித்தித்ததே" (கந்தரந்தாதி)

என அருணகிரிநாதராலும்,

"இன்னன நினைந்து கீர னிலங்கிலை நெடுவேற் செம்மல்
பன்னிரு செவியு மாரப் பருகமு தாகி யோதின்
உன்னிய வுன்னி யாங்கிங் குதவுவ தாகிப் பாவுண்
முன்னுற வந்து நிற்கு முருகாற்றுப் படைமொழிந்தான்"
(சீகாளத்திப். நக்கீரச். 115)

எனக் கவிஞர்களிற் பெரும்புகழ்வாய்ந்த துறைமங்கலம் ஸ்ரீசிவப் பிரகாச ஸ்வாமிகளாலும் திருமுருகாற்றுப்படை பாராட்டப்பெற்றிருத்தல் காண்க.