பத்துப்பாட்டு | பாம்பணந் தன்ன வோங்கிரு மறுப்பின் மாயோண் முன்கை யாய்தொடி கடுக்குங | ் 15 | கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவி னாய்தினை யரிசி யவைய லன்ன வேய்வை போகிய விரலுளர் நரம்பிற்நாடையன் கேள்வி போகிய நீள்விசித் தொடையன் மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன | 20 | வணங்குமெய்ந் நின்ற வமைவரு காட்சி யாறலை கள்வர் படைவிட வருளின் மாறுதலை பெயர்க்கு மருவின் பாலை வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்துஞ் சீருடை நன்மொழி நீரொடு சிதறி | 25 | யறல்போற் கூந்தற் பிறைபோற் றிருநுதற் கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்க ணிலவிதழ் புரையு மின்மொழித் துவர்வாய்ப் பலவுறு முத்திற் பழிதீர் வெண்பன் மயிர்குறை கருவி மாண்கடை யன்ன | 30 | பூங்குழை யூசற் பொறைசால் காதி னாணடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தி |
14 - 5. "நெடும்பணைத் திரடோண் மடந்தை முன்கைக், குறுந்தொடி யேய்க்கு மெலிந்துவீங்கு திவவு" (பெரும்பாண். 12 - 3); "தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவு" (மலைபடு. 21) 19 - 20. "மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்தி.......குற்ற நீங்கிய யாழ்." (சிலப். 7 : 2 - 4) 21. (பி-ம்.) ‘படையிட' 23. "வார்தல் வடித்த லுந்த லுறழ்தல்" (சிலப்.7 : கட்டுரை, 12) 16 - 24. "ஆய்தினை யவைய லனையவா நரம்பாங் கணிபெறவாரியும் வடித்தும், ஏயுற முறையே யுந்தியு முறழ்ந்து மியைந்தநீ ரோடு நன் மொழிக, டேய்வற வெடுத்துச் சிதறியும் பல்காற் றேனுற ழின்னிசை யெழுப்பி" (இலிங்க. நாரதர்கூகை. 24) 29 - 30. "மயிரெறிகத்தரிகை யனையவாய்" (சீவக. 168); "மயிரெறி கருவி வள்ளை" (கந்த. மாயைப், 46); "மயிரெறி கருவிதனதிழி தொழிலை மதித்துமஞ் சிகனுறை தூங்க" (ஆனைக்கா. அகிலாண்ட. 38)
|