85

2 - பொருநராற்றுப்படை

னாடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை
நெடுவரை மிசைய காந்தண் மெல்விரற
கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகி
35ரணங்கென வுருத்த சுணங்கணி யாகத்
தீர்க்கிடை போகா வேரிள வனமுலை
நீர்ப்பெயர்ச் சுழியி னிறைந்த கொப்பூ
ழுண்டென வுணரா வுயவு நடுவின்
வண்டிருப் பன்ன பல்கா ழல்கு
40லிரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கிற்
பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப

32. அரிமயிர் முன்கை : "அரிமயிர்த் திரண்முன்கை, வாலிழை மடமங்கையர்" (புறநா. 11 : 1 - 2)

33. காந்தள் மெல் விரல் : "முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்" (குறுந். 167 : 1)

34. உகிருக்குக் கிளிமூக்கு : "கிளிவா யன்ன வொளிவா யுகிரின்", "கிள்ளை வாயி னன்ன வள்ளுகிர்" (பெருங். 2. 15 : 76, 4, 7 : 42)

35. "இடையீர் போகா விளமுலை யாளை" (தே. திருவோத்தூர், 2); "ஈர்க்கிடை போகா விளமுலை மாதர்" (திருவா. போற்றி. 34); "ஈர்க்கிடை புகாம லடிபரந் தோங்கு மேரிள வனமுலை" (நைடதம், சுயம்வரப். 77)

35 - 6. சுணங்கணி யாகத்து .......... முலை : "சுணங்கணி வனமுலை" (கலித். 60 : 1)

37. "புனற்சுழி யலைத்துப் பொருந்திய கொப்பூழ்" (பெருங். 2. 15: 68)

39. "வரியல்குல் வண்டிருப் பன்ன தகைத்து" (யா. வி. சூ. 84, மேற். ‘கல்லின் மேல்')

"பாடுவண் டிருந்த வன்ன பல்கலை யகலல்குல்" (சீவக. 1996, ந.) என்பதற்கு இது மேற்கோள்)

40. யானைத்துதிக்கை மகளிர் துடைக்கு: "இரும்பிடித் தடக்கையிற் செறிந்த சேர்ந்துடன் றிரண்ட, குறங்கின்" (சிறுபாண். 19 - 20); "சிறுபிடித் தடக்கையிற் செறிவொடு புணர்ந்து, மென்மையி னியன்று செம்மைய வாகி, நண்புவீற் றிருந்த நலத்தகு குறங்கினள்" (பெருங். 3.5 : 12 - 4) ; "கரிக்கைக் கவான்" (யா. கா. க - றை. 14) ; "மால்யானைக் கைபோலக், கொல்லத் திரண்ட குறங்கினாள்" (விக்கிரம. உலா)