பின் இணைப்பு
| "நெருநலு முன்னாள் எல்லையும் ஒருசிறைப் |
| புதுவை யாகலிற் கிளத்தல் நாணி |
| நேரிறை வளைத்தோள் நின்தோழி செய்த |
| ஆருயிர் வருத்தங் களையா யோவென |
5 | எற்குறை யுறுதி ராயிற் சொற்குறை |
| எம்பதத் தெளியள் அல்லள் எமக்கோர் |
| கட்காண் கடவு ளல்லளோ பெரும |
| ஆய்கோன் மிளகின் அமலையங் கொழுங்கொடி |
| துஞ்சுபுலி வரிப்புறந் தைவரு |
10 | மஞ்சுசூழ் மணிவரை மன்னவன் மகளே." |
இச் செய்யுள் தொல்காப்பியம், களவியல் 23 ஆம் நூற்பாவின்கணுள்ள "அருமையின் அகற்சியும்" என்னும் துறைக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியரால் தம் உரைக்கண் எடுத்துக்காட்டாக ஆளப்பட்டுள்ளது. இது நற்றிணைக்குக் கூறப்பட்ட அடிவரையறைக்கு அமைவுடைத்தாகக் காணப்படுகின்றது.
இப் பதிப்பில்:
என்னுஞ் செய்யுளை அமைத்து அதற்குத் துறை, துறை விளக்கம், சொற்பொருள், விளக்கம் முதலியவற்றுடன் பதிப்பித்துள்ளோம். அதுவும் இறையனார் களவியல் மேற்கோளாகவுள்ளது ஆகையினால் மேற் செய்யுளையும் ஈண்டுக் குறித்துள்ளோம். அறிஞர் ஆய்ந்து பொருந்துவதைக் கொள்க.