பக்கம் எண் :

குறுந்தொகை


1


குறுந்தொகை

மூலமும் உரையும்

கடவுள் வாழ்த்து
    
தாமரை புரையுங் காமர் சேவடிப்  
    
பவழத் தன்ன மேனித் திகழொளிக் 
    
குன்றி யேய்க்கு முடுக்கைக் குன்றின் 
5
நெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் நெடுவேற்  
    
சேவலங் கொடியோன் காப்ப  
    
ஏம வைக லெய்தின்றா லுலகே. 

என்பது கடவுள் வாழ்த்து.

பாரதம் பாடிய பெருந்தேவனார்.

(பிரதி பேதம்) 4. ‘வெஞ்சுடர்’, ‘செஞ்சுடர்’ 6. ‘ஏமம் வைகல்’

    (பதவுரை) தாமரை புரையும் காமர் சேவடி -தாமரை மலரைப் போன்ற அழகிய செம்மையாகிய திருவடியையும், பவழத்து அன்ன மேனி - பவழத்தை ஒத்தசிவந்த நிறத்தை யும், திகழ் ஒளி - விளங்கா நின்ற ஒளியையும், குன்றி ஏய்க்கும் உடுக்கை - குன்றிமணியை ஒக்கும் சிவந்த ஆடை யையும், குன்றின் நெஞ்சுபக எறிந்த அம் சுடர் நெடு வேல் - கிரவுஞ்ச மலையினது நடுவிடம் பிளக்கும்படி வீசிய அழகிய ஒளியை உடைய நெடிய வேற் படையையும், சேவல் அம் கொடியோன் - கோழிச் சேவலை வரைந்த கொடியையு முடைய முருகக் கடவுள், காப்ப - பாதுகாத்து அருளுவதால், உலகு ஏமம் வைகல் எய்தின்று - உலகத்தில் உள்ள உயிர்கள் இன்ப மயமாகிய நாட்களை அடையா நின்றன; ஆதலின் உலகிற்கு இடையூறு இல்லை என்றவாறு.