வலிய பாண்டியனுக்கு, கூந்தற்கு இயற்கை மணமுண்டென்பதனைவிளக்கத் திருவுளம் பற்றும் பவளம் போலும் சிவந்த வாயினை யுடையாய்"(திருமயிலையமக அந்தாதி, 53, உரை.)
ஒப்புமைப் பகுதி 1. தும்பிகொங்கு தேர்தல்; "தாதுண் டும்பி" (மதுரைக்.655); "தாதுண் பறவை" (அகநா.4:11); "கொங்குண் வண்டே கரியாக"(பெரிய திருமொழி, 9,3:4). அஞ்சிறைத்தும்பி; "அஞ்சிறை வண்டி னரிக்கணம்" (முருகு.76); அறுசில் கால வஞ்சிறைத் தும்பி", "அஞ்சிறை வண்டி னரியினம்" (ஐங். 20, 489); "அஞ்சிறை மணிநிறத் தும்பி" (கலித்.46:2.)
2. காமம்செப்பல்: "தாமிள மகளிரைக் காமஞ் செப்பி" (பெருங். 11.41; 101.) கண்டதுமொழிதல்: ‘கண்டது மொழிவல்’’ (குறுந். 273; 4.)
3. பிறவிதோறுந் தொடர்ந்த நட்பு: ‘உடுத்துவழி வந்த வுழுவ லன்பு’’, ‘பிறப்பிடைக் கொண்டுஞ் சிறப்பொடு பெருகி, நெஞ்சிற் பின்னிநீங்கல் செல்லா, அன்பு’’, ‘தொன்முறை வந்த, பிறப்பிடைக் கேண்மைப்பெருமனைக் கிழத்தி’’, ‘பிறப்புவழிக் கேண்மை’’ (பெருங். 2.11:39,16:39-41, 18:115-6, 3. 6:64.)
4. செறியெயிற்றரிவை: ‘செறியெயிற் றரிவைய ருருவாய்’’ (நீலகேசி, 58.) 4-5. கூந்தலின் இயற்கை மணம்: ‘கூந்தல் ... நறுந்தண்ணியவே’’, ‘கைவள் ளோரி கானந் தீண்டி, எறிவளி கமழு நெறிபடு கூந்தல்’’, ‘நறுமென் கூந்தல்’’, ‘நாறிருங் கூந்தல்’’, ‘நறுங் கதுப்பு’’ (குறுந். 116:1-4, 199:3-4, 270:8. 272:8, 312:6); ‘நாறுமயிர்க் கொடிச்சி’’, ‘தண்ணிய கமழுந் தாழிருங் கூந்தல்’’, "நாறிருங் கதுப்பு’’, "வண்டுபடு நாற்றத், திருள்புரை கூந்தல்’’ (நற். 95:8, 137:1, 143:10, 250:8, 270:2-3); ‘மணநாறு கதுப்பினாய்’’ (கலித், 43: 23); ‘நாறிருங் கூந்தல்’’ (புறநா. 113:9)
மு | ‘வண்டுக ளோவம்மி னீர்ப்பூ நிலப்பூமரத்திலொண்பூ |
| உண்டு களித்துழல் வீர்க்கொன் றுரைக்கிய மேனமொன்றாய் |
| மண்டுக ளாடிவை குந்தமன் னுள்குழல் வாய்விரைபோல் |
| விண்டுகள் வாரு மலருள வோநும் வியலிடத்தே’’ |
| (திவ்.திருவிருத்தம், 55) |
| "தூவுண்டை வண்டினங் காள்வம்மின் சொல்லுமின் றுன்னிநில்லாக் |
| கோவுண்டை கோட்டாற் றழிவித்த கோன்கொங்க நாட்டசெங்கேழ் |
| மாவுண்டை வாட்டிய நோக்கிதன் வார்குழல் போற்கமழும் |
| பூவுண்டை தாமுள வோநுங்கள் கானற் பொழிலிடத்தே’’, |
| ‘இருங்கழல் வானவ னாற்றுக் குடியிகல் சாய்ந்தழியப் |
| பொருங்கழல் வீக்கிய பூழியன் மாறன்றென் பூம்பொதியில் |
| மருங்குழ லுங்களி வண்டினங் காளுரை யீர்மடந்தை |
| கருங்குழ னாறுமென் போதுள வோநுங் கடிபொழிலே’’, |
| ‘‘விண்டே யெதிர்ந்ததெவ் வேந்தர் படவிழி ஞத்துவென்ற |
| ஒண்டே ருசிதனெங் கோன்கொல்லிச் சார லொளிமலர்த்தா |