தேவ குலத்தார். (பி-ம்.) 3. ‘கருங்காற் குறிஞ்சிப்.’
(ப-ரை.) சாரல் - மலைப் பக்கத்தில் உள்ள, கரு கோல் குறிஞ்சிப் பூ கொண்டு - கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு, பெரு தேன் இழைக்கும் -பெரிய தேனை வண்டுகள் செய்தற்கு இடமாகிய, நாடனொடு நட்பு- நாட்டைஉடைய தலைவனோடு யான் செய்த நட்பானது, நிலத்தினும் பெரிது-பூமியைக் காட்டிலும் அகலம் உடையது; வானினும் உயர்ந்தன்று-ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது; நீரினும் அருமை அளவின்று- கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது.