பக்கம் எண் :

குறுந்தொகை


11


  
  துண்டே யுழல்வா யறிதியன் றேயுள வேலுரையாய் 
  
  வண்டே மடந்தை குழல்போற் கமழு மதுமலரே’’, 
  
‘‘பொருங்கழல் வானவற் காயன்று பூலந்தைப் போர்மலைந்தார் 
  
  ஒருங்கழ லேறவென் றான்கொல்லிச் சாரலொண் போதுகடம் 
  
  மருங்குழல் வாய்நீ யறிதிவண் டேசொல் லெனக்குமங்கை 
  
  கருங்குழல் போலுள வோவிரை நாறுங் கடிமலரே’’, 
  
‘‘தேற்றமில் லாததெவ் வேந்தரைச் சேவூர்ச் செருவழித்துக் 
  
  கூற்ற மவர்க்காய வன்கொல்லிச் சாரற்கொங் குண்டுழல்வாய் 
  
  மாற்ற முரைநீ யெனக்குவண் டேமங்கை வார்குழல்போல்  
  
  நாற்ற முடைய வுளவோ வறியு நறுமலரே.’’ 
  
                                        (பாண்டிக்கோவை.)  
(2)
  
(அவன் வரைந்து கொள்ள வேண்டுமென்னும் எண்ணம் உடையவளாகி அவன் செவியில் படும்படி அவனது நட்பைப் பழித்துக் கூறிய போது, தலைவி அந்நட்பு மிகச் சிறப்புடையது என்று உணர்த்தியது.)
 3.    
நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று  
    
நீரினு மாரள வின்றே சாரற் 
    
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு  
    
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே. 

என்பது தலைமகள் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டித்தோழி இயற்பழித்தவழித் தலைமகள் இயற்பட மொழிந்தது.

    (சிறைப்புறம் - வேலிக்குப் புறம்பு. இயற்பழித்தல் - இயல்பைஇழித்துக் கூறல்).

தேவ குலத்தார்.

     (பி-ம்.) 3. ‘கருங்காற் குறிஞ்சிப்.’

    (ப-ரை.) சாரல் - மலைப் பக்கத்தில் உள்ள, கரு கோல் குறிஞ்சிப் பூ கொண்டு - கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு, பெரு தேன் இழைக்கும் -பெரிய தேனை வண்டுகள் செய்தற்கு இடமாகிய, நாடனொடு நட்பு- நாட்டைஉடைய தலைவனோடு யான் செய்த நட்பானது, நிலத்தினும் பெரிது-பூமியைக் காட்டிலும் அகலம் உடையது; வானினும் உயர்ந்தன்று-ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது; நீரினும் அருமை அளவின்று- கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது.