குறுந்தொகை


cxxxvii


வல்லுநர்; உவமை கூறுதலிலும் உபகாரிகளின் குணங்களைப் பாராட்டுதலிலும் வீரச் செயல்களை விளக்குதலிலும் மிக்க ஆற்றல் வாய்ந்தவர். அஞ்சாத நெஞ்சினர். இவை இவருடைய பாடல் பகுதிகளால் விளங்கும். சோழர்களுள், நலங்கிள்ளி என்பவன் ஒரு காலத்தில் ஆவூரையும் ஒரு காலத்தில் உறையூரையும் முற்றி இருந்த பொழுது அவ்வக் காலங்களில் அடைத்துக் கொண்டு அந் நகரங்களுக்கு உள்ளே அஞ்சியிருந்த நெடுங்கிள்ளியை நோக்கி, ‘வெளியே வந்து போர் செய்தல், ஒற்றுமையுடன் வாழ்தல் இந்த இரண்டனுள் ஒன்றைச் செய்து கொள்க’ என்று இடித்துக் கூறிய பகுதியும் (புறநா. 44-5), நலங்கிள்ளியிடம் இருந்து உறையூருக்கு வந்த இளந்தத்தன் என்னும் புலவனை ஒற்று வந்தான் என்று நெடுங்கிள்ளி கொல்லத் தொடங்கிய போது அப்புலவனை உய்வித்தற் பொருட்டுப் பொதுவாகப் புலவர்களின் இயல்பை விதந்து கூறிய பகுதியும் (புறநா. 47), மலையமான் மக்களைக் கிள்ளிவளவன் யானைக்கு இடத்துணிந்த பொழுது அவர்களை உய்விக்கவும் அவனுடைய மனத்தைக் கனிவிக்கவும் எண்ணிச் சிறுவர்களின் இயல்பை எடுத்துக் கூறிய பகுதியும் (புறநா. 46)இவருடைய ஆற்றலையும் அருமைக் குணங்களையும் புலப்படுத்தும். “சிறப்புடை மரபில் பொருளு மின்பமும், அறத்து வழிப் படூஉந் தோற்றம் போல, இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை”, “போரெனிற் புகலும் புனைகழன் மறவர்”, “ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும், செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை”, “காலனுங் காலம் பார்க்கும் பாராது, ‘’வேலீண்டு தானை விழுமியோர் தொலைய, வேண்டிடத்தடூஉம் வெல்போர் வேந்தே”, “மையல் கொண்ட வேமமி லிருக்கையர், புதல்வர் பூங்கண் முத்தி மனையோட், கெவ்வங் கரக்கும் பைதன் மாக்களொடு, பெருங்கலக் குன்றன்றாற் றானே காற்றோ, டெரிநிகழ்ந் தன்ன செலவிற், செருமிகு வளவநிற் சினைஇயோர் நாடே”, “உடும்புரித் தன்ன வென்பெழு மருங்கிற், கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது, சில்செவித்தாகிய கேள்வி நொந்து”, “மென்மையின் மகளிர்க்கு வணங்கி வண்மையின், ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை, புனிறுதீர் குழவிக் கிலிற்றுமுலை போலச் சுரந்த காவிரி மரங்கொன் மலிநீர், மன்பதை புரக்கு நன்னாட்டுப் பொருநன்”, “யானை, நெடுநகர் வரைப்பிற் படுமுழா வோர்க்கும், உறந்தை யோனே குருசில், பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே”, “தைஇத் திங்கட்டண்கயம்