பக்கம் எண் :

குறுந்தொகை


13


கிழவோன்மாட்டுப் பெருமை யிற்றிரியாத அன்பின்கண்ணும்தலைவிக்குக் கூற்று நிகழும்; நிலத்தினும்... நட்பே: எனவரும்’ (தொல்.கற்பு.6, இளம்.); ‘இது நிறுத்தற்கட் கூறியது’ (தொல். கற்பு. 6, ந); 'இஃது ஈற்றயலடி மூச்சீர்த் தாயிற்று’ (தொல். செய்.68, ந.); இஃது ஈற்றயலடி முச்சீரான் வந்தமையின் நேரிசை ஆசிரியப்பா’ (வீர.யாப்புப்.9; யா.வி.71; யா. கா. செய்.7, இ.வி.747); ‘ஆசிரிப்பா அளவடியான் வந்தது' (யா.வி.27.)

     ஒப்புமைப் பகுதி 1. ‘நிலத்தினும் பெரிதே நேர்ந்தவர் நட்பே’’ (தொல். களவு. 20, ந. மேற்.)

     2. ‘கடலினும் பெரிதெமக் கவருடை நட்பே’’ (ஐங்.184:4.)

     1-2. நிலம் வான் கடல் என்ற மூன்றும் பெருமைக்கு எல்லையாகக் கூறப்படுதல்; ‘காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது’’, ‘‘பயன்றூக்கார் செய்த உதவி நயன்றூக்கின் நன்மை கடலிற் பெரிது’’, "வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சம், தானறி குற்றப் படின்’’, (குறள்.102,103, 272); ‘மண்ணினும் வானினுமற்றை மூன்றினும், எண்ணினும் பெரியதோரிடர்’’(கம்ப.அயோமுகி.99.)

     3. கருங்கோற் குறிஞ்சி: ‘கருங்கோற் குறிஞ்சிநும் முறைவினூர்க்கே’’(அகநா.308:16); ‘கருங்கோற் குறிஞ்சி யடுக்கம்’’ (புறநா.374:8); ‘கருங்கோற்குறிஞ்சியுங் கடிநாள் வேங்கையும்’’ (பெருங்.1:50:26).

     4. நாடனது நட்பு: ‘மலைநாடன் கேண்மை’’ (திணைமா. 18).

     3-4. குறிஞ்சித்தேன்: "குறிஞ்சிப் பெருந்தேனிறால்’’ (கல்.'வேற்றுப் பிடி')

(3)
  
(பிரிவாற்றாமல் வருந்துகின்றாள் என்று கவலையுற்ற தோழிக்கு,'தலைவன் முன்பு எனக்குச் செய்த தண்ணளியை நினைந்து ஆற்றினேன்'என்பது புலப்படக் கூறியது.)
 4.    
நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே  
    
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி 
    
அமைதற் கமைந்தநங் காதலர் 
    
அமைவில ராகுத னாமென் னெஞ்சே. 

என்பது பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோ.ழிக்குக் கிழத்திஉரைத்தது.

காமஞ்சேர் குளத்தார் (பி-ம். காமஞ்சொகினத்தார்).

     (பி-ம்) 1. ‘நோமே நெஞ்சே’

    (ப-ரை.) என் நெஞ்சு நோம் என் நெஞ்சு நோம்- எனது நெஞ்சம் வருந்தா நிற்கும், எனது நெஞ்சம் வருந்தா நிற்கும்; இமை தீய்ப்பு அன்ன-இமைகளைத் தீயச்