பக்கம் எண் :

குறுந்தொகை


15


(பிரிவாற்றாமையைால் தலைவி வருந்துதலை அறிந்து கவலையுற்றதோழிக்கு அவள், தன் கண்கள் துயிலாமையை உணர்த்தும் வாயிலாகக்காமநோயின் கொடுமையைக் கூறியது.)
 5.    
அதுகொ றோழி காம நோயே 
    
வதிகுரு குறங்கு மின்னிழற் புன்னை 
    
உடைதிரைத் திவலை யரும்புந் தீநீர் 
    
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் 
5
பல்லித ழுண்கண் பாடொல் லாவே.  

என்பது பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

நரிவெரூஉத்தலையார்.

     (பி-ம.்) 2. ‘மின்னிலைப் புன்னை’, ‘மென்னிழற் புன்னை’, 3.‘துவலை’.

    (ப-ரை.) தோழி -, வதி குருகு உறங்கும்- தன்னிடத்தில் தங்கியிருக்கும் குருகுகள் உறங்குதற்குக் காரணமாகிய, இன்நிழல் புன்னை - இனிய நிழலை உடைய புன்னை மரமானது, உடை திரைதிவலை அரும்பும்- கரையைச் சாரச்சார உடைகின்ற அலைகளால் வீசப்படும் துளியால் அரும்புகின்ற, தீ நீர் - கண்ணிற்கு இனிதாகியநீர்ப் பரப்பை உடைய, மெல்லம் புலம்பன்- மெல்லிய கடற்கரையையுடையதலைவன், பிரிந்தென- பிரிந்தானாக, பல் இதழ் உண் கண்- பல இதழ்களைஉடைய தாமரை மலரைப் போன்ற என் கண்கள், பாடு ஒல்லா- இமைபொருந்துதலைச் செய்யா வாயின; காம நோய் அது கொல் - காம நோய் என்பது அத்தன்மைத்தோ?

     (முடிபு) தோழி, புலம்பன் பிரிந்தெனக் கண்பாடொல்லா; காம நோய் அது கொல்.

     (கருத்து) தலைவன் பிரிவினால் யான் துயில் ஒழிந்தேன்.

     (வி-ரை.) அதுவென்றது கண் உறங்காமையைச் சுட்டி நின்றது; செய்யுளாதலின் சுட்டிப்பெயர் முன் வந்தது (தொல்.கிளவி.39.)தோழி:விளி. காமநோயே: ஏ, அசை. குருகு பகலிலும் இரவிலும் தங்குதற்குரியதாகலின் 'வதி குருகுறங்கும் புன்னை' என்றாள். இயல்பாகவே தங்குவதற்குரியதாயினும் அதன் நிழல் உறக்கத்தையும் உண்டு பண்ணுவதாதலின், 'இன்னிழற்புன்னை' என்றாள். உடைதிரை- முரி ‘‘கின்ற திரை; உடைதிரை முத்தஞ் சிந்த’’ (சீவக.2652.) தீ நீர்ப் புலம்பு, மெல்லம்புலம்பு என்க; தீமை-இனிமை; புலம்பு- கடற்கரை. மருதமும் நெய்தலும் மென்