மென்புலமெனப் படுமாதலின், `மெல்லம் புலம்பு’ எள்றாள். பிரிந்தென-பிரிந்தானாக; ‘‘தண்கடற் சேர்ப்பன் பிரிந்தென’’ (ஐங்.183.3.) பல்லிதழ்- பல இதழ்களை உடைய தாமரைப் பூ; சினையில் கூறும் முதலறி கிளவி. உண்: உவம உருபு: உண்கண்-மையுண்ட கண்களுமாம்.
தன் நாட்டில் குருகு உறக்கத்தைப் பெறும் புலம்பன் எனக்கு உறக்கம்நீங்குதற்குக் காரணனாயினான் என்பது குறிப்பு.
(மேற்கோளாட்சி) 1. ‘குறியது (குற்றெழுத்து) பிற்கூறிய முறையன்றிக் கூற்றினால்...அதுகொறோழி எனவும்... தொடர் மொழி யீற்று நின்ற ஒற்றுக்கெடுதலுங்கொள்க' (தொல். தொகை.18,ந); இடைச் சொல், அதுகொறோழி காமநோயே எனப் பெயரைச் சார்ந்து நின்று அதன் பொருளை விளக்கிற்று (தொல்.இடை. 1,ந.); இடைச் சொற் பகாப்பதம் பிறிதோடு வந்தது (நன்.150,மயிலை.); `அதுகொ... நோயே; என்றற்றொடக்கத்தன தொகா நிலைத் தொடர் மொழிகள்’(நன். 259,373,மயிலை; நன்.374சங.்) 'அதுகொல்: தொடர் மொழி' (நன்.260,சங்.)
4. மெல்லம் புலம்பு: 'தெள்ளம்புனல், மெல்லம்புலம்பு போல்வதோர்பண்புத் தொகை’ (திருச்சிற். 372,பேர்.)
மு. 'பிரிந்தவழிக் கலங்கியது: அதுகொ... நோயே என வரும்’(தொல்.களவு. 20, இளம்.); 'இது வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கூறியது;அதுகொ றோழி காமநோயே: என்னும் பாட்டும் அது’ (தொல்.களவு.21,ந.)
ஒப்புமைப் பகுதி 1. குருகு- நாரை (குறுந்.236:4-5, 296:1-2); அன்னப் பறவையெனினுமாம்; "கன்னியம் புன்னைமே லன்னங்காள்’’(யா.வி.60, மேற்.)குருகுறங்கும் புன்னை: "புன்னைத் தடவுநிலை மாச்சினை, புள்ளிறை கூரும்’ (அகநா.10:3-4.) இன்னிழற் புன்னை: 'புன்னையம் புகர்நிழல்’’ (குறுந்.303:6); "எக்கர்ப் புன்னை யின்னிழ லசைஇ" (அகநா.20:3); ‘‘கன்னியம் புன்னை யின்னிழற் றுன்னிய’’ (யா.வி.37,மேற்.) (பி-ம்.) இன்னிலைப் புன்னை: ‘’முடவுமுதிர் புன்னைத் தடவு நிலை மாச்சினை’’(அகநா.10:3.) (பி-ம்.) மின்னிலைப் புன்னை: ‘‘மின்னிலைப் பொலிந்த விளங்கிண ரவிழ்பொற், றண்ணுறும் பைந்தா துறைக்கும், புன்னையங் கானல்’’ (அகநா.11-3.)
2-3. புன்னை திரைத்திவலையால் அரும்பல்: ‘‘வான்கடற் பரப்பிற் றூவற் கெதிரிய, மீன்கண்டன்ன மெல்லரும் பூழ்த்த, முடவுமுதிர் புன்னை’’(அகநா.10:1-3); "தூவற் கலித்த தேம்பாய் புன்னை’’ (புறநா.24:7.)
4. மெல்லம் புலம்பன்: குறுந். 245:5; நற்.195:4; ஐங்.120:4, 190:3; அகநா.10:4. மு. ஐங். 133:2.
5. பல்லித முண்கண்: (குறுந்.259:4); "பல்லித ழுண்கணும் பரந்தவாற் பனியே’’, "பல்லித ழுண்கண் கலுழ’’ (நற்.155:10,241:11), "பல்லித ழுண்கண் பசத்தன்மற் றெவனோ’’, ‘‘பல்லித ழுண்கண் ணழப்பிரிந் தோரே’, "பல்லித ழுண்கண் மடந்தை’’, ‘‘பல்லித ழுண்கண் பனியலைக் கலங்க’, (ஐங்,170:4,190:4, 334:5, 351:4, 471:2); "பல்லிதழ் மலருண்கண்’’, "பல்லித ழுண்கண்ணுந் தோளும்’’ (கலித்.45:11, 100:10,112:9); "பல்லித