பக்கம் எண் :

குறுந்தொகை


17


ழுண்கண் பரந்தன பனியே’’ (அகநா.141:14.)கண்பாடொல்லா: (குறுந்.11:2, 357:1,365:2-6); "கண்படலொல்லா’’ (கலி.10:13.)

     4-5. தலைவன் பிரிவாற் கண்துயிலாமை: "நாடற்குத், துயிறுறந் தனவாற் றோழியென் கண்ணே’’ (குறுந்.186:3-4); "தமிழ்நர் பெருமாற்கென், கண்படா வாறே யுரை’’ (முத்.75.)

(5)
  
(பரிசப் பொருளை ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த இடத்துஆற்றாளாகிய தலைவி,நள்ளிரவில் யாவரும் துயிலவும் யான் துயின்றிலேனென்று தோழி துயின்றமையைப் புலப்படுத்தி அவளுக்குக் கூறியது).
 6.    
நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்  
    
தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று  
    
நனந்தலை யுலகமுந் துஞ்சும் 
    
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. 

என்பது வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள்தோழியை நெருங்கிச் (பி-ம்.நோக்கிச்) சொல்லியது.

     (வரைவிடை வைத்துப் பிரிதல்- மணம் செய்து கொள்ளுதற்குஇடையே பொருள் ஈட்டுதற்குத் தலைவன் பிரிதல்; வைத்து: சொன்னடை.இடைவைத்து- இடையீடாக நீக்கி வைத்தென்பர், நச்சினார்க்கினியர்;தொல். களவு.21,உரை.)

பதுமனார்.

     (பி-ம்.) 2 ‘முனிவின்றி’ 4 ‘ஓஒயான் ‘ஓரியான்’.

    (ப-ரை.) யாமம் நள்ளென்றன்று- இடையிரவு செறிந்த இருளை உடையதாக இரா நின்றது; மாக்கள் சொல் அவிந்து இனிது அடங்கினர்-மனிதர் பேசுதலை ஒழித்து இனிமையாகத் துயின்றனர்; நன தலை உலகமும் முனிவின்று துஞ்சும்-அகன்ற இடத்தை உடைய உலகத்தில் உள்ள எல்லாஉயிர்களும் வெறுப்பின்றித் துயிலா நிற்கும்; ஓர்யான் மன்ற துஞ்சாதேன்-யான் ஒருத்தியே நிச்சயமாகத் துயிலேனாயினேன்.

     (முடிபு) யாமம் நள்ளென்றன்று; மாக்கள் அடங்கினர்; உலகமும் துஞ்சும்; யான் ஒருத்தியே துஞ்சாதேன்.

     (கருத்து) யாவரும் துயிலும் நள்ளிரவிலும் யான் துயின்றிலேன்.

     (வி-ரை.) நள்: நளியென்னும் உரிச்சொல் ஈறு திரிபு; செறிவின்கண் வந்ததென்பர் அடியார்க்கு நல்லார் (சிலப். பதி. 41); நள்ளென்னும் ஓசையை