பெரும்பதுமனார். (பி-ம்.) 2. ‘மேலன’, ‘மேவுந;’ 4. ‘கயிறாள் பறையிற்;’ 6. ‘வேய்பயில் பழுவம்’.
(ப-ரை.) ஆரியர் கயிறு ஆடு பறையின் -ஆரியக்கூத்தர் கழையில் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடும் பொழுது கொட்டப்படும் பறையைப் போல, கால் பொர கலங்கி- மேல் காற்றானது தாக்குதலால் நிலை கலங்கி,வாகை வெள் நெற்று ஒலிக்கும்- வாகை மரத்தினது வெள்ளிய நெற்றுக்கள் ஒலித்தற்கு இடமாகிய, வேய்பயில் அழுவம்-மூங்கில்செறிந்த பாலை நிலப் பரப்பில், முன்னியோர்-கடந்து செல்ல நினைந்துவருபவர்களுள், வில்லோன் காலன கழல்-வில்லை உடையவனாகியஇவ்வாடவனது காலில் உள்ளன வீரக் கழல்கள்; தொடியோள் மெல் அடிமேலவும் சிலம்பு-தோள் வளையை அணிந்த இம்மகளினுடையமெல்லிய அடியின் மேலுள்ளனவும் சிலம்புகள்; நல்லோர் யார் கொல்-இந்நல்லோர் யாவரோ? அளியர்-இவர் அளிக்கத் தக்கார்!
(முடிபு) அழுவம் முன்னியோர் யார் கொல்? அளியர்!
(கருத்து) மணம் புரிந்து கொள்ளாத இவர் திறம் இரங்கத் தக்கது.
(வி-ரை.) உடன்போக்கின்கண் நேரும் இடையூறுகளை நீக்கற் பொருட்டு வில்லுடையனாதலின் தலைவனை வில்லோனென்றார்;உதயணன் வாசவத்தையைக் கொண்டு செல்லுகையில் வராகன்