ஒப்புமைப் பகுதி 1. அடும்பின் ஆய்மலர்: “ஆய்பூ வடும்பி னலர்” (கலி. 144:30.)
2. நீர்வார் கூந்தல்: குறுந். 294:1.
3. ஓரை மகளிர்:குறுந்: 48:3, ஒப்பு.
1-3. மகளிர் அடும்பின் மலரை அணிதல்: “மாக்கொடி யடும்பின் மாயித ழலரி, கூந்தன் மகளிர் கோதைக் கூட்டும்” (நற். 145: 2-3); “அடும்பி னலர்கொண் டுதுக்காணெம், கோதை புனைந்த வழி”(கலி. 144: 30-31.)
மகளிர் நெய்தற்றொடை யணிதல்; “நெய்தற் பூவுட னெறிதரூஉத் தொடலை, தைஇ” (நற். 96: 7-8); “கடலாடு மகளிரும், நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார், உடலகங் கொள்வோ ரின்மையிற், றொடலைக் குற்ற சிலபூ வினரே” (ஐங். 187: 2-5.)
6. ஐதேகம்ம: நற். 52:11, 240:1.
மெய்தோய் நட்பு: குறுந். 61:4,247:7. தலைவனது நட்பு: குறுந். 247: 6-7, ஒப்பு.
(401)
குறுந்தொகை முற்றும்
இத்தொகை முடித்தான் பூரிக்கோ.
இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர்.
இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும்
1. எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது.
1. | 307, 391 ஆம் செய்யுட்கள் மட்டும் ஒன்பதடிகளை யுடையனவாகக் காணப்படுகின்றன. |