மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனா ரெனவும், விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனாரெனவும் இருவருளர்; அவரின் இவர் வேறென்பது தெரிய அடைமொழி கொடாது கூறப்பட்டார். இவர் பாலையையும் நெய்தலையும் புனைந்து பாடியுள்ளார்; இவர் பாடியனவாக நற்றிணையில் 137 ஆம் பாடலொன்றும் குறுந்தொகையிலிரண்டுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
124. பெருங்குன்றூர் கிழார்
இஃது ஊர்பற்றி வந்த பெயர்; இவர் வேளாண்மரபினர். இவர் தமிழ்பயின்று பெரும்புலமையுடையராய் வறுமை மேலீட்டினால் வருந்திக் குடக்கோச் சேரலிரும்பொறை யென்பா னிடஞ்சென்று பாடிப் பலநாள் காறும் அவன்பாலிருந்தும் அவன் யாதோ பரிசில் கொடுப்பவன்