பூங்கணுத்திரையார் (பி-ம். பூங்கண்ணுத்திரையார்.) (பி-ம்) 4. ‘நொதுமலர்த்தலையே’.
(ப-ரை.) தோழி-, இனி காண் - இப்பொழுது பார்ப்பாயாக; யாணர் - புதுவருவாயாகிய, கடு புனல் - மிக்க புனலையும், அடைகரை - அடைந்த கரையையுமுடைய, நெடு கயத்து இட்ட - ஆழமான குளத்தின்கண் அமைத்த, மீன்வலை - மீனுக்குரிய வலையின்கண், மா பட்டாஅங்கு - விலங்கு அகப்பட்டாற் போல, நொதுமலர் தலை - அயலாரிடத்து, இது - வரைவுக்குரிய இம் முயற்சி, எவன் - என்ன பயனுடைத்து?
(முடிபு) தோழி, காண்; நொது மலர்தலை இது எவன்?
(கருத்து) அயலார் வரைவுமேற்கொள்வதனாற் பயனொன்று மில்லை.
(வி-ரை.) மீனுக்கென அமைத்த வலையில் விலங்கு பட்டாற் போலத் தலைவனுக்கென அமைந்த என்திறத்து நொது மலர் வரைய முயன்றனரென்று உவமையை விரித்துக்கொள்க. மா - நீர்நாய் முதலியன.
வாழி, மற்று, ஓ, ஏ: அசை நிலைகள்.
(மேற்கோளாட்சி) மு. தலைவி பிற விலக்குவித்தது (நம்பி. 164.) ஒப்புமைப் பகுதி
மு. | ‘‘அருங்கண்ணி வெண்மதி சூடும்பிரான் வெங்கை யாவிமலர்க் |
| கருங்கண்ணி கங்கையின் மென்றூவி யன்னங் கருதிவைத்த |
| பெருங்கண்ணி யிற்புனற் காக்கைபட் டாங்குப் பிறர்நமதில் |
| மருங்கண்ணி வந்தன ரென்பது கேட்டின்னு மாய்ந்திலமே” |
| (வெங்கைக் கோவை, 229.) |
(171)