உலோச்சன் (பி-ம். உலோகச்சனார்.) (பி-ம்) 3. ‘மன்றலம் பெண்ணை’, ‘மன்றற் பெண்ணை’, ‘மன்றப்பெண்ணை’; 5.‘தோழி நாநகப்’.
(ப-ரை.) தோழி -, கடல்பாடு அவிந்து - கடலானதுஒலி அடங்க, கானல் மயங்கி - கடற்கரைச் சோலை மயக்கத்தையுடையதாக, துறை நீர் இரு கழி - துறையையும்நீரையும் உடைய கரிய கழி, புல்லென்றன்று - பூக்கள்கூம்பியதனால் பொலிவழிந்தது; மன்றம் அம் பெண்ணை -மன்றத்தின் கண் உள்ள அழகிய பனைமரத்தினது, மடல் சேர்வாழ்க்கை - மடலின் கண்ணே பொருந்திய வாழ்க்கையையுடைய, அன்றிலும் - அன்றிற் பறவையும், பையென - மெல்ல, நரலும் - கூவும்; நாம் தம் புலப்பினும் - முன்புநாம் தம்மைப் புலந்தாலும், பிரிவு ஆங்கு அஞ்சி - அவ்விடத்துப் பிரிதலை அஞ்சி, தணப்பு அரு காமம் - நீங்குதற்கரிய காம இன்பத்தை, தண்டியோர் - அலைத்தும்பெற்றவராகிய, அவர் - தலைவர், இன்று--, வருவர்.
(முடிபு) தோழி, கழி புல்லென்றன்று; அன்றிலும் நரலும்; தண்டியோர் இன்று வருவர்.
(கருத்து) தலைவர் இன்று வருவர்.
(வி-ரை.) கடல் பாடவிதல் முதலியன இரவு வந்ததைப் புலப்படுத்தின. கடல் ஒலியடங்குதலாவது, வலைஞரும் கலவரும் தொழி லொடுங்கிஅகஞ் சேர்ந்தமையின் அவர்களால் உண்டாகும் ஆர்ப்பு அடங்குதல்.இருளினால் கானல் மயங்கியது. அவிந்து, மயங்கி: எச்சத் திரிபுகள்.
அன்றில் பெரும்பாலும் பனைமடலிலே வாழ்வது. வருவர் கொல்:கொல், அசை நிலை (புறநா 98:18, உரை); “வருவர் கொல்” (கலி. 11:5)என்பதற்கு ‘வருவர் போல இருந்தது’ என்றுரைப்பர் நச்சனார்க்கினியர்.வாழி: அசைநிலை. தப்புலப் பினும்: தம், நிலைமொழி; “நத் துறந்து”(குறுந். 174:4) என்றது போல. தண்டியோர் - அலைத்துங் கொள்வோர்(பொருந. 104, ந.)
ஒப்புமைப் பகுதி 1. கடல் பாடு அவிந்து: அகநா. 50:1.
2. புல்லென்றல்: குறுந். 19:2. ஒப்பு, 3-4. மன்றப் பெண்ணையில்அன்றில் இரவில் நரலுதல்: “யாம நள்ளென .... மன்றப் பெண்ணைவாங்குமடற் குடம்பைத், துணைபுண ரன்றி லுயவுக்குரல் கேட்டொறும்”(நற். 303:1-5.)பெண்ணையில் வாழும் அன்றில் இரவில் நரலுதல்:குறுந். 301:1-4.
அன்றில் இரவில் நரலுதல்: குறுந். 160:1-4, ஒப்பு.
அன்றில் பனைமரத்தில் வாழ்தல்: “மன்றிரும் பெண்ணை மடல்சேரன்றில்” (கலி. 129:12); “மனைசேர் பெண்ணை மடிவாயன்றில்”,“பெண்ணை யோங்கிய வெண்மணற் படப்பை, அன்றிலகவும்,“துணைபுண ரன்றில், எக்கர்ப் பெண்ணை யகமடல் சேர”, “பராரைப் பெண்ணைச் சேக்குங் கூர்வாய், ஒருதனி யன்றில்”, “பனைமிசை, அன்றில் சேக்கு முன்றில்” (அகநா. 50:11, 120:14-5, 260:6-7, 305:12- 3, 360:16-7); ‘பனையின்கண் அன்றில்’ (நன். 301, சங். மேற்.)
5-6. நாம் தப் புலப்பினும் : குறுந். 340:2.
7. தணப்பருங் காமம்: குறுந். 57:3, ஒப்பு.
(177)