ஒக்கூர் மாசாத்தி. (பி-ம்) 1. ‘யாற்றொடு’; 3. ‘முகையு’; 4. ‘றோழியெங்’.
(ப-ரை.) தோழி-, என் கண் - என் கண்கள், ஆர்கலி ஏற்றொடு - மிக்க முழக்கத்தையுடைய இடியேற்றோடு,கார் தலை மணந்த - மேகம் மழைபெய்து கலந்த, கொல்லைபுனத்த - முல்லை நிலத்திலுள்ளனவாகிய, முல்லை மென்கொடி - மெல்லிய முல்லைக் கொடிகள், எயிறு என முகைக்கும் நாடற்கு - பற்களைப் போல அரும்பும் நாட்டையுடையதலைவன் பொருட்டு, துயில் துறந்தன - உறக்கத்தையொழிந்தன.
(முடிபு) தோழி, என்கண் நாடற்குத் துயில் துறந்தன.
(கருத்து) தலைவன் இன்னும் வாராமையின் நான் துயிலொழிந்துவருந்துகின்றேன்.
(வி-ரை.) ஏறு - இடியேறு; “இன்குர லேற்றொடு” (குறிஞ்சிப். 49);“முழுவதிர்ந் தன்ன முழக்கத் தேறோ, டுரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து” (அகநா. 328:2-3.) தலைமணந்த : தலை அசை நிலை; ‘தலை மயங்கி யென்பதனுள் தலை அசை நிலை’ (புறநா. 157:9, உரை) எனப் பிறாண்டும் இவ்வசை நிலை வருதல் காண்க. கொல்லைப் புனம் - புனமாகிய கொல்லை; ‘புனமென்பது, முன்பு பயிராயதனை; கொல்லை யென்பது, பயிரின்றித் தரிசாய்க் கிடந்த காட்டினை’ (89:17) என்பர் அகநானூற்று உரையாசிரியர். முல்லை யெயிறென முகைக்கு மென்றதுகார்ப்பருவம் வந்ததைப் புலப்படுத்தியது. ‘முகையும்’ என்னும் பாடமும்அரும்பும் என்னும் பொருளையுடையது; “முகைந்த தாமரை” (ஐங். 6:4.)என வருவதை இங்கே கருதுக. நாடற்குத் துயில் துறத்தலாவது, நாடனைச்சேராமையின் அவனை நினைந்து துயிலா திருத்தல்; நாடனால் துயில்துறந்தனவென உருபு மயக்க மாக்குதலும் ஆம்.
இஃது ஆற்றாமைக்குக் காரணம் கூறியது.
ஒப்புமைப் பகுதி 2. கொல்லைப் புனம் : “கொல்லை யிரும்புனத்து” (நாலடி. 178); “கொல்லைப் புனத்த வகில்” (ஐந். எழு. 2.)
1-2. கார், புனம், முல்லை : குறுந். 188:1-2.
2-3. முல்லை எயிறென முகைத்தல் : (குறுந். 126:3-4, ஒப்பு);“முல்லை யிலங்கெயி றீன” (கார். 14); “கார்கொடி முல்லை யெயிறீன”(ஐந். எழு. 21) “கார்செய் புறவிற் கவினிக் கொடிமுல்லை, கூரெயிறீன”,“முல்லை யெயிறீன” (கைந்நிலை, 25, 34.)
முல்லை முகைக்கும் : “பாசிலை முல்லை முகைக்கும்” (புறநா. 117:9.)
1-3. முல்லை கார்காலத்தில் அரும்புதல் : குறுந். 126:3-5, ஒப்பு.
3-4. தலைவன் பிரிவினால் கண் துயிலாமை : குறுந். 5:4-5, ஒப்பு.
(186)