(தலைவனது குறையைக் கேட்ட தோழி தலைவிபால், “நெடுநாட்களாக நினது உடம்பாட்டை எதிர்நோக்கி வந்து கொண்டிருந்த தலைவன் யான் சேட்படுத்தியமையின் சில காலமாக வாரா தொழிந்தான்” என்று இரக்கம் வரும்படி கூறியது.)
 230.   
அம்ம வாழி தோழி கொண்கன் 
    
தானது துணிகுவ னல்லன் யானென் 
    
பேதை மையாற் பெருந்தகை கெழுமி 
    
நோதகச் செய்ததொன் றுடையேன் கொல்லோ 
5
வயச்சுறா வழங்குநீ ரத்தம் 
    
சின்னா ளன்ன வரவறி யானே. 

என்பது வலிதாகக் கூறிக் குறை நயப்பித்தது.

அறிவுடை நம்பி

    (பி-ம்.) 3. ‘பெறுதகை’; 4. ‘றுடையன்’; 5. ‘நீரததவச்’; 6. ‘ளின்ன’.

    (ப-ரை.) தோழி -, அம்ம - ஒன்று கூறுவன்,கேட்பாயாக: கொண்கன் - தலைவன், வய சுறா வழங்குநீர் அத்தம் - வலியை உடைய சுறா மீன் வழங்குகின்றநீரை உடைய வழியில், சில் நாள் - சில நாட்களாக, அன்ன -முன்னர் வந்து கொண்டிருந்த அத்தகைய, வரவு அறியான் -வருதலை அறியானாயினான்; தான் அது துணிகுவன்அல்லன் - அங்ஙனம் வாராது இருத்தலைத் தானாகவேதுணிந்து ஒழுகும் இயல்புடையன் அல்லன்; யான்--, என்பேதைமையால் - என் அறிவின்மையால், பெரு தகைகெழுமி - பெரிய உரிமையைப் பொருந்தி, நோதகச் செய்ததுஒன்று - அவன் வருந்தி இங்கே வாராத வண்ணம் செய்தசெயல் ஒன்றை, உடையேன்கொல் - உடையேனோ?

     (முடிபு) தோழி-, கொண்கன் வரவறியான்; தான் துணிகுவன் அல்லன்;யான் கெழுமிச் செய்தது உடையேன்கொல்.

     (கருத்து) நின்னைக் காணப் பலகால் வந்த தலைவன் யான்சேட்படுத்தியமையின் வாராதொழிந்தான்கொல்?

     (வி-ரை.) வாழி: அசை நிலை. கொண்கன்- நெய்தல் நிலத் தலைவன்.அது என்னும் சுட்டு, செய்யுளாதலின் முன் வந்தது; வாராமையைச் சுட்டியது. தகை - தகுதி; இங்கே உரிமை.

  
“பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க 
  
 நோதக்க நட்டார் செயின்”                    (குறள், 805) 

என்பவாகலின் நான் நட்புரிமையால் இங்ஙனம் செய்தேன் என்றாள்.நோதக - நோவ. தலைவன் நோவச் செய்தலாவது சேட்படுத்தல். ஓ:அசை நிலை. அன்ன: பண்டறி சுட்டு. வரவறியான் - வந்திலன் என்றபடி.

    ஒப்புமைப் பகுதி 1. அம்மவாழி தோழி: குறுந். 77:1, ஒப்பு.

    5.வயச்சுறா: குறுந். 269:3.

    சுறா வழங்குநீர்: “எறிசுறாக் கலித்த விலங்குநீர்ப் பரப்பு”(குறுந். 318:1); “சுறவுப்பிற ழிருங்கழி நீந்தி யல்கலும், இரவுக்குறிக்கொண்கன் வந்தனன்” (சிற்றட்டகம்.)

(230)