உலோச்சன். (பி-ம்.) 1. ‘அதுவர வன்மையோ’; 2. ‘பிறுக’; 5. ‘அடம்பிவர் பமன்ற கொடுயர்’, ‘டூர்நெடும் பெண்ணை’; 7. ‘பெறிய’.
(ப-ரை.) தோழி--, கானல் ஆடு அரை புதைய - கடற்கரைச் சோலையின் இடத்திலுள்ள அசைந்த அடியிடம் புதையும்படி, கோடை இட்ட - மேல்காற்றுக் கொணர்ந்து இட்ட, அடும்பு இவர் மணல் கோடு ஊர - அடும்பங் கொடி படர்ந்த மணற் குவியல் பரவ, நெடுபனை - நெடிய பனை மரங்கள், குறிய ஆகும் - குறியனவாகும், துறைவனை - கடற்றுறையை உடைய தலைவனை, பெரிய கூறி - முருகன் என்று சொல்லி வெறியெடுத்து, யாய் அறிந்தனள் - நம் தாய் அறிந்து கொண்டாள்; ஆதலின், அதுவரல் அன்மை அரிது - வரைவுக்குரிய நாள் வாராமை அரிதாகும்; வரைவு நேரும்; அவன் மார்பு உறுக என்ற நாள் குறுகி - அவனது மார்பை அடைக என்று வரையறுத்த நாள் அணிமையாக வந்தும், ஈங்கு ஆகின்று - இவ்வண்ணம் நின்பால் ஆற்றாமை உண்டாகின்றது; இஃது என் கொல்?
(முடிபு) தோழி, துறைவனை யாய் கூறி அறிந்தனள்; அது வரலன்மைஅரிது; குறுகி ஈங்காகின்று.
(கருத்து) வரைவு அணிமையில் நிகழ்வதாதலின் நீ ஆற்றாது இருத்தல் நன்றன்று.
(வி-ரை.) அது: நெஞ்சறி சுட்டு; வரைவு நாளைச் சுட்டியது. அன்மையோ: ஓகாரம் அசை நிலை. அரிதே: ஏகாரம் தேற்றம். குறுகியுமென்ற உம்மை தொக்கது. குறுகியதனால் இத்தகைய முயற்சிகள் நடை பெறுகின்றன என்று பொருள் கொள்ளுதலும் ஆம்.
கோடை-மேல்காற்று; குறுந். 343:5, 388:2, 369:3. மணல் மேலே பரவப் பரவ வெளியிலே தோன்றும் பனையின் அடிப் பகுதி குறியதாகின்றது. பெரிய கூறுதலாவது. இது தெய்வத்தான் வந்ததெனக் கூறுதல்; பெரிய கூறல், புறநா. 375:19. கூறியென்றது கூறி வெறியாட்டெடுத்தாள் என்பதைக் குறித்தது. யாய் அறிந்தது, தோழி அறத்தொடு நின்றதனால்.
ஒப்புமைப் பகுதி 1-2. தலைவன் மார்பைத் தலைவி உறுதல்: குறுந். 68:4, ஒப்பு; 247:7, ஒப்பு.
3.ஆகின்று: குறுந். 15:4, ஒப்பு. ஈங்காகின்று: நற். 144:5.
5.மணற்கோட்டின்மேல் அடும்பங் கொடி படர்தல்: (குறுந்.349:12); "அடும்பிவ ரணியெக்கர்" (கலி. 132:16); "அடும்பம னெடுங்கொடி யுள்புதைந் தொளிப்ப, வெண்மணல் விரிக்குந் தண்ணந் துறைவன்" ( தொல். களவு. 20, ந. மேற்.)
4-5. காற்றால் மணற்குவியல் உண்டாதல்; (குறுந். 372); "கடுவளி தொகுப்ப வீண்டிய, வடுவா ழெக்கர் மணலினும்" (புறநா. 55:20-21.)
5-6. மணலாற் பனை மறைதல்: குறுந். 372:1-3.
(248)