(முடிபு) தோழி, காதலர் பொழுது கண்டும் துறக்குவர் கொல்லோ?
(கருத்து) கார்ப் பருவம் வந்தமையின் இனித் தலைவர் விரைவில் மீள்வர்.
(வி-ரை.) துறக்குவர் - துறந்துறைவர் என்னும் பொருட்டு, கொல்: அசை நிலை; ஓ: வினா; எதிர்மறைப் பொருளது.
மகளிர் பன்னிரண்டு திங்கள் கருவுற்றிருத்தலும் உண்டு;
| “பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்டவப் பாங்கினால் |
| என்னிளங் கொங்கை யமுத மூட்டி யெடுத்து யான் |
| பொன்னடி நோவப் புலரியே கானிற் கன்றின்பின் |
| என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினே னெல்லே பாவமே” (பெரியாழ். 3.2:8.) |
நிறை - நிறைந்த கருப்பம். ஒதுங்கல் - நடத்தல்.
வயாநோயுடையார் புளித்த சுவையை உடைய பொருள்களை விரும்புதல் இயல்பு; பசும்புளி - பச்சைப் புளியங்காய்;
| “நீருறை கோழி நீலச் சேவல் |
| கூருகிர்ப் பேடை வயாஅ மூர |
| புளிங்காய் வேட்கைத் தன்றுநின் |
| மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே” (ஐங். 51.) |
கடுஞ்சூல் மகளிர் - முதற்சூல் கொண்ட மகளிர் (மதுரைக். 609, ந.)
ஒப்புமைப் பகுதி 1. அம்ம வாழி தோழி: குறுந். 77:1, ஒப்பு.
4. வயாநோயுற்றார் புளியை விரும்புதல்: “வயாவுநோய் நிலையாது, வளைகாய் விட்ட புளியருந் தாது” (கல். 7:5-6); “பொய்த் துயில் கொண்டு புளிக்கு முவந்தாள்” (பிரபு. மாயை உற்பத்தி. 27.)
5. கடுஞ்சூல்: சிறுபாண். 148; பெரும்பாண். 395; கலி. 110:14.
(287)