ஓதலாந்தையார். (பி-ம்.) 1. ‘வேனில்’ 2. ‘சினையஞற்றலி’, ‘யுகுத்தலி னானாது’4. ‘வழங்குஞ் சிறுநெறிதாவும்’ 7. ‘மழைக்கணிக்கு’.
(ப-ரை.) தோழி, கானம் இருப்பை - காட்டிலேவளர்ந்த இருப்பை மரத்தினது, வேனல் வெள்பூ - வேனிற்காலத்திலே மலரும் வெள்ளிய பூக்கள், வளிபொரு நெடுசினை உகுத்தலின் - காற்றால் அலைக்கப்பட்ட நெடியகொம்புகள் உதிர்ப்ப தனால், ஆர்கழல்பு - காம்பினின்றும்கழன்று, களிறு வழங்கு சிறு நெறி புதைய - களிறுகள்செல்லும் சிறிய வழி மறையும்படி, தாஅம் - பரக்கின்ற,பிறங்குமலை அரு சுரம் - விளங்கிய மலைகளையுடையகடத்தற்கு அரிய பாலைநிலத்தை, இறந்தவர் படர்ந்து - கடந்து சென்ற தலைவரை நினைந்து, பயில் இருள் நடுநாள் - பயிலுகின்ற இருளையுடைய அரையிரவில், துயில் அரிதுஆகி - துயிலல் அரியதாகி, தெள் நீர் நிகர் மலர் புரையும் - தெள்ளிய நீரிடத்துள்ள ஒளியையுடைய மலரை ஒக்கும்,நன் மலர் மழைக்கணிற்கு - நல்ல மலர்ந்த குளிர்ச்சியையுடைய கண்ணிற்கு, பனி எளிய - நீர்த்துளிகள் எளிதிலேஉண்டாவன.
(முடிபு) சுரம் இறந்தவர்ப் படர்ந்து துயில் அரிதாகிக் கண்ணிற்குப்பனி எளிது.
(கருத்து) யான் ஆற்றியிருப்பவும் என் கண்கள் துயிலுதலொழிந்துஅழுதன.
(வி-ரை.) தலைவனது பிரிவினால் வருந்திய கிழத்தியை நோக்கி,"நீ ஆற்றுதல் வேண்டும். துயிலாதிருத்தலையும் அழுதலையும் நீங்குதி"என்று தோழி கூற, கிழத்தி, "நான் ஆற்றுவேன்; ஆயினும் என் கண்கள்தாமே துயிலொழிந்து அழுதன. யான் என் செய்கேன்!" என்று கண்களை வேறுபடுத்துக் கூறினாள்.
கானம் - பாலைநிலம். இருப்பை அந்நிலத்திற்குரியது;
| "அத்த விருப்பைப்பூ" (நற். 111:1.)் |
வேனிலென்பது வேனலெனவும் வரும்;
| "இளவேனல் வந்ததா லென்னாங்கொ லின்று் |
| வளவேனற் கண்ணி மனம்"; |
| "வேனற்பா ணிக்கலந்தாண் மென்பூந் திருமுகத்தைக் |
| கானற்பா ணிக்கலந்தாய் காண்" (சிலப். 8: இறுதி வெண்பாக்கள்); |
| "வேனல்வேண் மலர்க்கணைக்கும் வெண்ணகைச்செவ் வாய்க்கரிய் |
| பானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும் பாழ்நெஞ்சே" (திருவா. திருச்சதகம், 19.)் |
வளி பொருதலின் சினை பூவை உகுத்தன. பயில் இருள் நடு நாள் - நானும் தலைவனும் ஒருவரோடொருவர் பயிலுதற்குரிய இருளையுடைய நடுநாளென்பதும் பொருந்தும். நிகர் மலர்புரையுமென்று வைத்தலின் மலர் மழைக்கண்ணென்பதில் மலர் வினையாயிற்று. கண்ணுக்குத் துயில் அரிதாகி அழுதல் எளிதாயிற்று.
ஒப்புமைப் பகுதி 1-3. இருப்பைமலர் காற்றினால் உகுதல்: "இருப்பை.... ஆலி வானிற் காலொடு பாறி", "அத்த விருப்பையார்கழல் புதுப்பூத், துய்த்த வாய துகணிலம் பரக்க" (அகநா. 9:3-9, 15:13-4.)
மலர் ஆர் கழல்பு உகுதல்: குறுந். 282:6-7.
4. அருஞ்சுரம்: குறுந். 77:5, ஒப்பு.
7. மழைக்கண்: குறுந். 222:6, 259:4.
6-7. குறுந். 291:5-8; அகநா.11:12-5.
5-7. தலைவி துயிலாமை: குறுந். 6:4, ஒப்பு.
தலைவி துயிலாமையும் அழுதலும்: குறுந். 11:2, ஒப்பு; அகநா. 82:16-8.
(329)