மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன். (பி-ம்) 3. ‘நாறுமயிர்’ 5. ‘குன்றகச்’ 6. ‘மன்றனண்ணிய’.
(ப-ரை.) தோழி--, நாறு உயிர் மடம் பிடிதழீஇ -மணம் வீசுகின்ற மூச்சையுடைய மடப்பத்தையுடைய பெண்யானையைத் தழுவி, தட கை யானை - வளைந்த கையையுடைய யானை, குன்றம் சிறுகுடி இழிதரு மன்றம் - குன்றினிடத்துள்ள சிற்றூரின்கண் இறங்கிச் செல்லும் மன்றங்கள்,நண்ணிய மலை கிழவோற்கு - பொருந்திய மலையையுடைய தலைவனுக்கு, வந்த வாடை சில் பெயல் கடைநாள் - வாடை வந்த சிலவாகிய பெயலையுடைய நாளின்கடையாமத்தில், நோய் நீந்து அருபடர் தீர - வருத்தத்திலேதுளையும் பொறுத்தற்கரிய நின் துன்பம் தீரும் வண்ணம்,நீ நயந்து - நீ விரும்பி, கூறின் எவன் - கூறத்தகுவனவற்றைக்கூறினால் என்ன துன்பம் உளதாகும்?
(முடிபு) தோழி, மலைகிழவோற்குப் படர்தீர நீ கூறின் எவனோ?
(கருத்து) நினது துன்ப மிகுதியைத் தலைவனுக்கு நீயே கூறவேண்டும்.
(வி-ரை.) நாறு உயிர் - தோன்றுகின்ற உயிர்ப்பெனலும் ஆம். பிடியைத் தழுவி யானை இழிதருவதைக் கூறியது, தலைவன் தன்னை வெளிப்படையாக வரைந்து கொள்ள வேண்டுமென்னும் குறிப்பை உணர்த்தியது.
ஒப்புமைப் பகுதி 1. சில்பெயற் கடைநாள்: குறுந். 261:2.
1-2. வாடை துயர் தருதல்: குறுந். 103:4, ஒப்பு. 3. நாறுயிர்: அகநா. 7:10.
3-4. நாறுயிர் மடப்பிடி தழீஇ: அகநா. 189:4.
5. குன்றச் சிறுகுடி: “குன்றகச் சிறுகுடி” (முருகு. 196.)
6. மன்றம்: குறுந். 346:3. மு. குறுந். 98:1-3, ஒப்பு.
(332)