விற்றூற்று மூதெயினனார் (பி-ம். வீற்றுளுத் தெயினார், வீற்றுறுத் தெயினான், வீற்றினாத் தேயினான்.) (பி-ம்.) 1. ‘குருந்தொடு’; 2. ‘நெடுவெளிக்’; 3. ‘வுணங்குங்’; 6. ‘விரவை’ ‘யுலர்பதங்கொள்ளா யிரவை’.
(ப-ரை.) பனை தலை - பனையின் உச்சியிலுள்ள,கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய - கருக்கையுடையநெடிய மடலானது குருத்தோடு மறைய, கடு வளி தொகுத்த -விரைவையுடைய காற்றுக் கூட்டிய, நெடு வெள் குப்பை - உயர்ந்த வெள்ளிய மணற்குவியலாகிய, கணம் கொள்சிமையம் - தொகுதியைக் கொண்ட சிகரத்தையுடைய,அணங்கும் கானல் - வருத்துகின்ற கடற்கரையில், ஆழிதலை வீசிய அயிர் சேறு அருவி - கடல் வீசிய கருமணற்சேற்றையுடைய அருவியால், கூழை பெய் எக்கர் குழீஇய பதுக்கை - கூந்தலினிடத்தே பெய்யப்படுகின்ற எக்கராகக் குவிக்கப்பட்ட குவியல், புலர்பதம் கொள்ளா அளவை - உலரும் செவ்வியை அடையாததற்குள், இ அழுங்கல் ஊர் - இந்த ஆரவாரத்தையுடைய ஊரில், அலர் எழுந்தன்று - பழிமொழி எழுந்தது.
(முடிபு) பதுக்கை புலர்பதங் கொள்ளாவளவை இவ்வூரில் அலர் எழுந்தன்று.
(கருத்து) இங்கே அலர் மிக்கது.
(வி-ரை.) கடுவளி - மிக்க காற்றுமாம். குப்பையாகிய சிமையம். தனித்தவரை முனிவு செய்யும் பொழிலுடையதாதலின் (புறநா. 33:19,உரை) அணங்குங் கானலென்றாள். சேறுடைய அருவியாதலின்தலைமயிரிற் பெய்தற்குரிய மண்ணையுடையதாயிற்று (குறுந். 113:5,வி-ரை.) பதுக்கை புலர் பதங்கொள்ளா அளவை யென்றது தலைவன் வந்து சென்ற சுவடு மறைவதற்குள் என்ற குறிப்பையுடையது.
பனைத்தலை: சீர், பாவின் முதலிற் கூனாய் நின்றது.
ஏ: அசை நிலை.
ஒப்புமைப் பகுதி 1. கருக்குடைய பனைமடல்: குறுந். 281:1.
2. காற்றால் மணற்குவியல் உண்டாதல்: குறுந். 248:4-5, ஒப்பு.
கடுவளி: குறுந். 39:1, ஒப்பு.
1-2. மணற்சிமையம்: நற். 260:4;ஐங். 100:2; அகநா. 190:5-7.
1-3. பனைமடல் மணலால் மூடப்படுதல்: (குறுந். 248:4-5, 281: 1-2); “தூங்க லோலை யோங்குமடற் பெண்ணை, மாவரை புதைத்த மணன்மலி முன்றில்”, “ஓங்குமண லுடுத்த நெடுமாப் பெண்ணை”(நற். 135:1-2, 199:1.)
(372)