கங்குல் வெள்ளத்தார். (பி-ம்) 2. ‘மாலை’; 3. ‘நிறைவரம்பாக’, ‘உயிரை வரம்பாக’; 5. ‘வெள்ளக்’.
(ப-ரை.) தோழி--, எல்லை கழிய - பகல் நீங்க, முல்லை மலர - முல்லைக் கொடிகள் மலர, கதிர் சினம்தணிந்த - சூரியனது வெப்பம் குறைந்த, கை அறு மாலையும் -செயலறுதற்குரிய மாலைக் காலத்தையும், இர வரம்பு ஆக -இராப்பொழுது எல்லையாக எண்ணி அது வருமட்டும்,நீந்தினம் ஆயின் - கடந்தோமாயின், கங்குல் வெள்ளம் -அதன்மேல் வரும் அவ்விரவின் மிகுதி, கடலினும் பெரிது - கடலைக் காட்டிலும் பெரியது;, எவன் - நாம் மாலையைநீந்துவதால் வரும் பயன் யாது?
(முடிபு) தோழி, மாலையும் நீந்தினமாயின் கங்குல் வெள்ளம் பெரிது; எவன்கொல்?
(கருத்து) மாலையும் யாமமும் தலைவரது பிரிவை நினைவுறுத்தித் துன்பம் செய்வனவாம்.
(வி-ரை.) முல்லை மாலையில் மலர்ந்தது. மாலையும்: உம்மை உயர்வுசிறப்பு. ‘‘செயலறுதற்குரிய மாலைக்காலத்தை நீந்தலே அரிது; அதனை நீந்தினும் பின்வரும் கங்குல் அதனினும் துன்பஞ் செய்வதிற் பெரிதாயிற்று” என்றாள். சிறுபுன் மாலையாதலின் நீந்தினேமாயினும் மேல்வருவது பெருங்கடலைப் போன்ற கங்குலென்று வருந்தினாள்.
தலைவி இங்ஙனம் இவ்விரண்டு பொழுதிற்கும் வருந்துதல்,
| “வந்தன்று வாழியோ மாலை |
| ஒருதா னன்றே கங்குலு முடைத்தே” (குறுந். 122:3-4) |
என்று முன்னும் வந்தது.
மாலையைக் கடலாகவும் அதன் பின்னர்த்தாகிய இராவை அதன் வரம்பாகவும் வைத்துக் கூறினாள்; ஒரு சிறுபொழுதை அடுத்து வரும்மற்றொரு சிறு பொழுதைக் கரையாகக் கூறும் இச் செய்யுளை நினைந்து பரிமேலழகர், ‘கூடிய ஞான்று பிரிவரென்று அஞ்சப் பண்ணிய காலை,அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது’ (குறள். 1225) என்று உரை எழுதினர்;
| “முழங்குகடற் பட்டோ ருழந்துபின் கண்ட |
| கரையெனக் காலை தோன்றலின்” (பெருங். 33:209) |
இராவென்பது செய்யுளில் இரவென நின்றது (தொல். உயிர்மயங்கு. 32.) இரவரம்பென்றமையின் மாலையும் கடலாயிற்று; இஃதுஏகதேச வுருவகம்.
எவன்கொல் - யாம் இனிச் செய்வது என் என்று பொருளுரைத்தலும் பொருந்தும்; கொல், வாழி, ஏ: அசை நிலைகள்; ஏ தேற்றமுமாம்.
ஒப்புமைப் பகுதி 2. கதிர் சினந்தணிந்த மாலை: குறுந். 195:1-2.
கதிரின் சினம்: குறுந். 195:1, ஒப்பு.
கையறுமாலை: குறுந். 32:1, ஒப்பு.
1-2. மாலையில் முல்லை மலர்தல்: குறுந். 108:4-5, ஒப்பு.
4. வாழி தோழி: குறுந். 260:4, ஒப்பு.
5. இரவுக்குக் கடல்: (குறுந். 240:6-7); “நிறைபுணையா, யாம நெடுங்கட னீந்துவேன்”, “இருண்மாலை வெள்ளத்துள்” (பு. வெ. 298, 328); “அல்லாழிக் கரைகண்டான்... துயராழி நெடுங்கடலுட்டுயில்கின் றானே” (கம்ப. மிதிலைக். 154); “கங்குற் கடற்கெல்லை” (இராசராச. 199)
(387)