பரணர். (பி-ம்.) 1. ‘யுண்டுறை தொக்க’; 4. ‘வி்டுவுழி பரத்தலானே’.
(ப-ரை.) தோழி, பசலை - பசலையானது, காதலர் - தலைவர், தொடுவுழி தொடுவுழி - நம்மைத் தீண்டுந்தோறும், நீங்கி - நம் உடலை விட்டு அகன்று, விடுவுழி விடுவுழி - பிரியுந்தோறும், பரத்தலான் - பரவுதலால், ஊர் உண் கேணிஉண்துறை தொக்க - ஊரினரால் உண்ணப்படும் நீரையுடையகிணற்றின் உண்ணுந் துறையினிடத்தே கூடிய, பாசி அற்று - பாசியைப் போன்றது.
(முடிபு) பசலை, நீங்கிப் பரத்தலான் பாசியற்று.
(கருத்து) பசலைநோய் மிக்கமையால் யான் வருந்துவேனாயினேன்.
(வி-ரை.) ஊரால் உண்ணப்படும் நீரையுடைய கேணி; கேணி:ஆகுபெயர், நீருக்காதலின். பாசி மக்கள் நீர் கொள்ளுங்கால் விலகியும்பின் கூடியும் நிற்றல் போலப் பசலை தலைவன் முயங்குங்கால் நீங்கியும் பிரியுங்கால் பரந்தும் நின்றதென்றாள். எப்பொழுதும் தலைவனோடுறையப் பெறுவேனேல், பசலை நோய் முற்றுமொழியுமென்பதும் இவ்வுவமையாற் போந்தது.
தொடுதல்: இடக்கரடக்கு. விடுவுழி விடுவுழியென்று பன்மை கூறியது வரையாது ஒழுகும் களவொழுக்கத்தில் அடுத்தடுத்துப் பிரிவு நேர்வதுகுறித்து.
ஏகாரங்கள் அசை நிலை.
(மேற்கோளாட்சி) மு. “பட்டரை ஒரு தமிழன், ‘கேட்டிரங்கி யென்னாதே,கண்டிரங்கி யென்னப்பெறுமோ?’ என்ன, ‘அணைத்தகை நெகிழ்த்தவளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத்தகாதென்றிருக்க வேண்டாவோ?இப்படிக் கூடுமோ என்னில்: - புல்லி: இத்யாதி, காதலர் தொடுவுழி:இத்யாதி, உனக்கு இத்தமிழ் போதாதோ?’ என்றார்” (திருவாய்மொழி,1, 4:4, ஈடு.)
ஒப்புமைப் பகுதி 2-4. பசலை தலைவன் தொடுவுழி நீங்குதலும் விடுவுழிப் பரத்தலும்: “விடுவழி விடுவழிச் சென்றாங்கவர், தொடுவழி நீங்கின்றாற் பசப்பே” (கலி. 130: 20-21.)
பசலை தலைவன் விடுவுழிப் பரத்தல்: “முயங்காக்காற் பாயும் பசலை” (நாலடி. 391); “விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன், முயக்கற்றம் பார்க்கும் பசப்பு”, “புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தே னவ்வளவில், அள்ளிக்கொள் வற்றே பசப்பு” (குறள், 1186, 1187.)
(399)