|
|
நீ உணர்ந்தனையே-தோழி!-வீ உகப் |
|
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப் |
|
பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடு |
|
உடங்கு இரை தேரும் தடந் தாள் நாரை |
5 |
ஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன், |
|
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை, |
|
தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப் படச் சொரியும் |
|
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப் |
|
பெரு நல் ஈகை நம் சிறு குடிப் பொலிய, |
10 |
புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க் |
|
கடு மாப் பூண்ட நெடுந் தேர் |
|
நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே? |
உரை |
|
தோழி, தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது.-பிசிராந்தையார்
|
|
உள்ளார்கொல்லோ-தோழி!-துணையொடு |
|
வேனில் ஓதி பாடு நடை வழலை |
|
வரி மரல் நுகும்பின் வாடி, அவண |
|
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன் |
5 |
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் |
|
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர், |
|
புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர, |
|
வில் கடிந்து ஊட்டின பெயரும் |
|
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே! |
உரை |
|
பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.
|
|
''பிரசம் தூங்க, பெரும் பழம் துணர, |
|
வரை வெள் அருவி மாலையின் இழிதர, |
|
கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும் |
|
மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு!'' எனப் |
5 |
பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட! |
|
செல்கம்; எழுமோ; சிறக்க, நின் ஊழி! |
|
மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள், |
|
நல்கூர் நுசுப்பின், மெல் இயல், குறுமகள் |
|
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய |
10 |
பழங்கண் மாமையும் உடைய; தழங்கு குரல் |
|
மயிர்க் கண் முரசினோரும் முன் |
|
உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே. |
உரை |
|
நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில், |
|
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்; |
|
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி- |
|
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ |
5 |
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப் |
|
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன் |
|
என்ன மகன்கொல்-தோழி!-தன்வயின் |
|
ஆர்வம் உடையர் ஆகி, |
|
மார்பு அணங்குறுநரை அறியாதோனே! |
உரை |
|
தலைமகன்சிறைப்புறமாக, தலைவி, தோழிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-இளந்திரையனார்
|
|
கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க, |
|
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று, |
|
அதவத் தீம் கனி அன்ன செம் முகத் |
|
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க, |
5 |
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து, |
|
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக் |
|
குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்; |
|
சீறூரோளே, நாறு மயிர்க் கொடிச்சி; |
|
கொடிச்சி கையகத்ததுவே, பிறர் |
10 |
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே. |
உரை |
|
தலைமகன் பாங்கற்கு, ''இவ்விடத்து இத்தன்மைத்து'' என உரைத்தது.-கோட்டம்பலவனார்
|
|
''இதுவே, நறு வீ ஞாழல் மா மலர்தாஅய், |
|
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை, |
|
புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே, |
|
பொம்மற் படு திரை நம்மோடு ஆடி, |
5 |
புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் |
|
துவரினர் அருளிய துறையே; அதுவே, |
|
கொடுங் கழி நிவந்த நெடுங் கால் நெய்தல் |
|
அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ, |
|
தமியர் சென்ற கானல்'' என்று ஆங்கு |
10 |
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி, |
|
பைஇப் பையப் பசந்தனை பசப்பே. |
உரை |
|
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய் வரைவு கடாயது.-கோக்குளமுற்றனார்
|
|
அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலரா |
|
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு, |
|
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும், |
|
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே; |
5 |
அதனினும் கொடியள் தானே, ''மதனின் |
|
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடு |
|
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?'' என |
|
வண்டு சூழ் வட்டியள் திரிதரும் |
|
தண்டலை உழவர் தனி மட மகளே. |
உரை |
|
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது.-மாறன் வழுதி
|
|
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின் |
|
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி |
|
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி |
|
நூழை நுழையும் பொழுதில், தாழாது |
5 |
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, |
|
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன் |
|
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்! |
|
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த் |
|
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி, |
10 |
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே- |
|
வைகலும் பொருந்தல் ஒல்லாக் |
|
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே! |
உரை |
|
இரவுக்குறி வந்து ஒழுகும்தலைவனைத் தோழி வரைவு கடாயது.-உக்கிரப் பெருவழுதி
|
|
''நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை, |
|
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின், |
|
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர் |
|
தாம் வரத் தெளித்த பருவம் காண்வர |
5 |
இதுவோ?'' என்றிசின்-மடந்தை!-மதி இன்று, |
|
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை |
|
பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல் |
|
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல- |
|
பிடவமும், கொன்றையும் கோடலும்- |
10 |
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே. |
உரை |
|
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, ''பருவம் அன்று'' என்று வற்புறுத்தியது.-இளந்திரையனார்
|
|
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர் |
|
மாரிக் கொக்கின் கூரல் அன்ன |
|
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் |
|
தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின் |
5 |
வான் கோல் எல் வளை வௌவிய பூசல் |
|
சினவிய முகத்து, ''சினவாது சென்று, நின் |
|
மனையோட்கு உரைப்பல்'' என்றலின், முனை ஊர்ப் |
|
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும் |
|
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப் |
10 |
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின் |
|
மண் ஆர் கண்ணின் அதிரும், |
|
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே. |
உரை |
|
பரத்தை, தலைவிக்குப்பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச்சொல்லியது.-பரணர்
|
|