|
|
யாங்குச் செய்வாம்கொல்-தோழி! ஓங்கு கழைக் |
|
காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்று |
|
ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல் |
|
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப் |
5 |
பெயல் ஆனாதே, வானம்; பெயலொடு |
|
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென, |
|
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே; |
|
பெருந் தண் குளவி குழைத்த பா அடி, |
|
இருஞ் சேறு ஆடிய நுதல, கொல்களிறு |
10 |
பேதை ஆசினி ஒசித்த |
|
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே? |
உரை |
|
ஆற்றாது ஏதம் அஞ்சி வேறுபட்டாள், வெறியாடலுற்ற இடத்து, சிறைப்புறமாகச்சொல்லியது.-பேராலவாயர்
|
|
மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித் |
|
தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் |
|
மணம் கமழ் நாற்றம் மரீஇ, யாம் இவள் |
|
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி, |
5 |
வீங்கு உவர்க் கவவின் நீங்கல்செல்லேம்; |
|
நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி, நாளும் |
|
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே; |
|
அன்பு இலை; வாழி, என் நெஞ்சே! வெம் போர் |
|
மழவர் பெரு மகன் மா வள் ஓரி |
10 |
கை வளம் இயைவது ஆயினும், |
|
ஐது ஏகு அம்ம, இயைந்து செய் பொருளே. |
உரை |
|
தலைமகன் செலவு அழுங்கியது.-பாலத்தனார்
|
|
யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃது |
|
அறிந்தனள்கொல்லோ? அருளினள்கொல்லோ? |
|
எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?- |
|
''வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன், |
5 |
ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள் |
|
கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்று |
|
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும் |
|
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்; |
|
தண்ணென உண்டு, கண்ணின் நோக்கி, |
10 |
முனியாது ஆடப் பெறின், இவள் |
|
பனியும் தீர்குவள், செல்க!'' என்றோளே! |
உரை |
|
வரைவு நீட்டிப்ப, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.-நல்வேட்டனார்
|
|
வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ, |
|
வாப் பறை விரும்பினைஆயினும், தூச் சிறை |
|
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து- |
|
கருங் கால் வெண் குருகு!-எனவ கேண்மதி: |
5 |
பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை; |
|
அது நீ அறியின், அன்புமார் உடையை; |
|
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை |
|
இற்றாங்கு உணர உரைமதி-தழையோர் |
|
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல் |
10 |
தெண் திரை மணிப் புறம் தைவரும் |
|
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே! |
உரை |
|
காமம் மிக்க கழிபடர்கிளவி.-சேந்தங் கண்ணனார்
|
|
ஓங்கு மலை நாட! ஒழிக, நின் வாய்மை |
|
காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி, |
|
உறு பகை பேணாது, இரவின் வந்து, இவள் |
|
பொறி கிளர் ஆகம் புல்ல, தோள் சேர்பு |
5 |
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின், |
|
கண் கோள் ஆக நோக்கி, ''பண்டும் |
|
இனையையோ?'' என வினவினள், யாயே; |
|
அதன் எதிர் சொல்லாளாகி, அல்லாந்து, |
|
என் முகம் நோக்கியோளே: ''அன்னாய்!- |
10 |
யாங்கு உணர்ந்து உய்குவள்கொல்? என, மடுத்த |
|
சாந்த ஞெகிழி காட்டி- |
|
ஈங்கு ஆயினவால்'' என்றிசின் யானே. |
உரை |
|
வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழி தலைவற்குச் சொல்லியது.-பெருவழுதி
|
|
குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ |
|
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய, |
|
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை, |
|
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச் |
5 |
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா, |
|
ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும்கொல்லோ |
|
அருளான் ஆதலின், அழிந்து இவண் வந்து, |
|
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி, |
|
''ஏதிலாட்டி இவள்'' எனப் |
10 |
போயின்று கொல்லோ, நோய் தலைமணந்தே |
உரை |
|
வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைவி சொல்லியது.-பெருவழுதி
|
|
தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக் |
|
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென, |
|
துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி |
|
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி, |
5 |
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால் |
|
கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும் |
|
மா மலை நாட! மருட்கை உடைத்தே- |
|
செங் கோல், கொடுங் குரல், சிறு தினை வியன் புனம் |
|
கொய் பதம் குறுகும்காலை, எம் |
10 |
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே! |
உரை |
|
செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-பொதும்பில் கிழார்
|
|
பெரு முது செல்வர் பொன்னுடைப்புதல்வர் |
|
சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின் |
|
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல, |
|
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர்மாதோ- |
5 |
வீரை வேண்மான் வெளியன் தித்தன் |
|
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின் |
|
வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப, |
|
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து, |
|
அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை |
10 |
நீடு நீர்ப் பனித் துறைச் சேர்ப்பன் |
|
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே! |
உரை |
|
பகற்குறி வந்து நீங்கும் தலைமகன் போக்கு நோக்கி, தோழி மாவின்மேல்வைத்துச் சொல்லியது.- முதுகூற்றனார்
|
|
உடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து, |
|
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி, |
|
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல |
|
பல் வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து, |
5 |
இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும் |
|
வன் புலக் காட்டு நாட்டதுவே-அன்பு கலந்து |
|
நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து |
|
உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை |
|
நுண் முகை அவிழ்ந்த புறவின் |
10 |
பொறை தலை மணந்தன்று; உயவுமார் இனியே. |
உரை |
|
வினைமுற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது.- கபிலர்
|
|
மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின் |
|
பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ! |
|
கண்படை பெறாஅது, தண் புலர் விடியல், |
|
கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடு |
5 |
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு |
|
கவர் படு கையை கழும மாந்தி, |
|
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த, நின் |
|
நடுநரொடு சேறிஆயின், அவண் |
|
சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம்மில் |
10 |
மா இருங் கூந்தல் மடந்தை |
|
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே. |
உரை |
|
சிறைப்புறமாக உழவர்க்குச் சொல்லுவாளாய்த் தோழி செறிப்பு அறிவுறீஇயது.-தூங்கலோரியார்
|
|