|
|
விதையர் கொன்ற முதையல் பூழி, |
|
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின் |
|
கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை, |
|
அரலை அம் காட்டு இரலையொடு, வதியும் |
5 |
புறவிற்று அம்ம, நீ நயந்தோள் ஊரே: |
|
''எல்லி விட்டன்று, வேந்து'' எனச் சொல்லுபு |
|
பரியல்; வாழ்க, நின் கண்ணி!-காண் வர |
|
விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா |
|
வண் பரி தயங்க எழீஇ, தண் பெயற் |
10 |
கான் யாற்று இகுமணற் கரை பிறக்கு ஒழிய, |
|
எல் விருந்து அயரும் மனைவி |
|
மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே! |
உரை |
|
வினை முற்றி மறுத்தரும்தலைமகற்குத் தேர்ப்பாகன் சொல்லியது.-ஒரு சிறைப்பெரியனார்
|
|
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத |
|
கருங் கால் செந்தினை கடியுமுண்டென; |
|
கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி |
|
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின; |
5 |
''நரை உரும் உரறும் நாம நள் இருள் |
|
வரையக நாடன் வரூஉம் என்பது |
|
உண்டுகொல்? அன்றுகொல்? யாதுகொல் மற்று?'' என |
|
நின்று, மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி, |
|
அன்னையும் அமரா முகத்தினள்; நின்னொடு |
10 |
நீயே சூழ்தல் வேண்டும்- |
|
பூ வேய் கண்ணி!-அது பொருந்துமாறே. |
உரை |
|
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய்த் தலைவன் கேட்பச்சொல்லியது.-செங்கண்ணனார்
|
|
உரையாய்-வாழி, தோழி!-இருங் கழி |
|
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி |
|
வாங்கு மடற் குடம்பை, தூங்கு இருள் துவன்றும் |
|
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை, |
5 |
கானல் ஆயமொடு காலைக் குற்ற |
|
கள் கமழ் அலர தண் நறுங் காவி |
|
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ, |
|
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி, |
|
புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல் |
10 |
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் |
|
சிறு விளையாடலும் அழுங்கி, |
|
நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே. |
உரை |
|
தலைவன்சிறைப்புறத்தானாக, தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.- காஞ்சிப் புலவனார்
|
|
ஒன்று இல் காலை அன்றில் போலப் |
|
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை |
|
யானும் ஆற்றேன்; அதுதானும் வந்தன்று- |
|
நீங்கல்; வாழியர்; ஐய!-ஈங்கை |
5 |
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர், |
|
நவ்வி நோன் குளம்பு அழுந்தென, வெள்ளி |
|
உருக்குறு கொள்கலம் கடுப்ப, விருப்புறத் |
|
தெண் நீர்க் குமிழி இழிதரும் |
|
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே. |
உரை |
|
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவற்கு உரைத்தது.-மோசி கண்ணத்தனார்
|
|
''இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை |
|
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி, |
|
நல் அரா நடுங்க உரறி, கொல்லன் |
|
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அகழும் |
5 |
நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம்'' என, |
|
வரைந்து வரல் இரக்குவம் ஆயின், நம் மலை |
|
நல் நாள் வதுவை கூடி, நீடு இன்று |
|
நம்மொடு செல்வர்மன்-தோழி!-மெல்ல |
|
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர் |
10 |
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை, |
|
மென் தினை நெடும் போர் புரிமார் |
|
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே. |
உரை |
|
வரைவு நீட்டிப்ப, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.
|
|
பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க் |
|
கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி |
|
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் |
|
ஆள் பெறல் நசைஇ, நாள் சுரம் விலங்கி, |
5 |
துனைதரும் வம்பலர்க் காணாது, அச் சினம் |
|
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம், |
|
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின், |
|
இளமையின் சிறந்த வளமையும் இல்லை; |
|
இளமை கழிந்த பின்றை, வளமை |
10 |
காமம் தருதலும் இன்றே; அதனால், |
|
நில்லாப் பொருட் பிணிச் சேறி; |
|
வல்லே-நெஞ்சம்!-வாய்க்க நின் வினையே! |
உரை |
|
பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கிச் செலவு அழுங்கியது.
|
|
இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை |
|
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து, |
|
உவன் வரின், எவனோ?-பாண!-பேதை |
|
கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த |
5 |
கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும், |
|
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய |
|
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும், |
|
''மெல்லம் புலம்பன் அன்றியும், |
|
செல்வாம்'' என்னும், ''கானலானே''. |
உரை |
|
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.-சீத்தலைச் சாத்தனார்
|
|
''பகல் எரி சுடரின் மேனி சாயவும், |
|
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் |
|
எனக்கு நீ உரையாயாயினை; நினக்கு யான் |
|
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின், |
5 |
அது கண்டிசினால் யானே'' என்று, நனி |
|
அழுதல் ஆன்றிசின்-ஆயிழை!-ஒலி குரல் |
|
ஏனல் காவலினிடை உற்று ஒருவன், |
|
கண்ணியன், கழலன், தாரன், தண்ணெனச் |
|
சிறு புறம் கவையினனாக, அதற்கொண்டு |
10 |
அஃதே நினைந்த நெஞ்சமொடு |
|
இஃது ஆகின்று, யான் உற்ற நோயே. |
உரை |
|
குறை நேர்ந்த தோழி தலைவி குறை நயப்பக் கூறியது. தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉம் ஆம்.- நற்சேந்தனாா
|
|
பெரு நகை கேளாய், தோழி! காதலர் |
|
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் |
|
பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச் |
|
செல்ப என்ப, தாமே; சென்று, |
5 |
தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை |
|
வாழ்தும் என்ப, நாமே, அதன்தலை- |
|
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப, |
|
படு மழை உருமின் உரற்று குரல் |
|
நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே. |
உரை |
|
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை முகம் புக்கது.-ஒளவையார்
|
|
வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண் |
|
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப, |
|
கோலின் எறிந்து காலைத் தோன்றிய |
|
செந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த் |
5 |
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ? |
|
எனை விருப்புடையர் ஆயினும், நினைவிலர்; |
|
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும் |
|
வாடிய வரியும் நோக்கி, நீடாது, |
|
''எவன் செய்தனள், இப் பேர் அஞர் உறுவி?'' என்று |
10 |
ஒரு நாள் கூறின்றுமிலரே; விரிநீர் |
|
வையக வரையளவு இறந்த, |
|
எவ்வ நோய்; பிறிது உயவுத் துணை இன்றே. |
உரை |
|
பிரிவிடை மெலிந்த தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது.- நெய்தல்தத்தனார்
|
|