|
|
இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள், கய வாய், |
|
மாரி யானையின் மருங்குல் தீண்டி, |
|
பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை, |
|
நீடிய சடையோடு ஆடா மேனிக் |
5 |
குன்று உறை தவசியர் போல, பல உடன் |
|
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும் |
|
அருஞ் சுரம் எளியமன், நினக்கே; பருந்து பட, |
|
பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை |
|
ஏந்து கோட்டு யானை இசை வெங் கிள்ளி |
10 |
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த |
|
அரிசில் அம் தண் அறல் அன்ன, இவள் |
|
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே. |
உரை |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லிச் செலவு அழுங்கியது.-சல்லியங்குமரனார்
|
|
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள், |
|
பாணி கொண்ட பல் கால் மெல் உறி |
|
ஞெலி கோல் கலப் பை அதளொடு சுருக்கி, |
|
பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன் |
5 |
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப, |
|
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி |
|
சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும் |
|
புறவினதுவே-பொய்யா யாணர், |
|
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும், |
10 |
முல்லை சான்ற கற்பின், |
|
மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே. |
உரை |
|
வினை முற்றி மீளும்தலைமகன், தேர்ப்பாகற்குச் சொல்லியது.-இடைக்காடனார்
|
|
ஐதே கம்ம யானே; ஒய்யென, |
|
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து, |
|
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும், |
|
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும், |
5 |
கிள்ளையும், ''கிளை'' எனக் கூஉம்; இளையோள் |
|
வழு இலள் அம்ம, தானே; குழீஇ, |
|
அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர் |
|
இன்னா இன் உரை கேட்ட சில் நாள் |
|
அறியேன் போல உயிரேன்; |
10 |
''நறிய நாறும் நின் கதுப்பு'' என்றேனே. |
உரை |
|
மனை மருட்சி.-கண்ணகாரன் கொற்றனார்
|
|
பெருங் களிறு உழுவை தாக்கலின், இரும் பிடி |
|
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு, |
|
போது ஏர் உண் கண் கலுழவும், ஏதில் |
|
பேதை நெஞ்சம் கவலை கவற்ற |
5 |
ஈங்கு ஆகின்றால்-தோழி!-பகுவாய்ப் |
|
பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை, |
|
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக் |
|
கரை அருங் குட்டம் தமியர் நீந்தி, |
|
விரவு மலர் பொறித்த தோளர் |
10 |
இரவின் வருதல் அறியாதேற்கே. |
உரை |
|
ஆற்றது ஏதத்திற்குக்கவன்று சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது.-கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
|
|
இருங் கழி பொருத ஈர வெண் மணல் |
|
மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி |
|
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும் |
|
காமர் கொண்கன், நாம் வெங் கேண்மை |
5 |
ஐது ஏய்ந்தில்லா ஊங்கும், நம்மொடு |
|
புணர்ந்தனன் போல உணரக் கூறி, |
|
''தான் யாங்கு?'' என்னும் அறன் இல் அன்னை; |
|
யான் எழில் அறிதலும் உரியள் நீயும்; நம் |
|
பராரைப் புன்னைச் சேரி, மெல்ல, |
10 |
நள்ளென் கங்குலும், வருமரோ- |
|
அம்ம வாழி!-தோழி அவர் தேர் மணிக் குரலே! |
உரை |
|
இரவுக்குறி வந்து தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி வரைவுகடாயது.-நம்பி குட்டுவன்
|
|
வில்லாப் பூவின் கண்ணி சூடி, |
|
''நல் ஏமுறுவல்'' என, பல் ஊர் திரிதரு |
|
நெடு மாப் பெண்ணை மடல் மானோயே!- |
|
கடன் அறி மன்னர் குடை நிழற் போலப் |
5 |
பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து, |
|
இருந்தனை சென்மோ-''வழங்குக சுடர்!'' என, |
|
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள் |
|
நல்லேம் என்னும் கிளவி வல்லோன் |
|
எழுதி அன்ன காண் தகு வனப்பின் |
10 |
ஐயள், மாயோள், அணங்கிய |
|
மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே! |
உரை |
|
பின்னின்ற தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது.-கந்தரத்தனார்
|
|
யாங்கு ஆகுவமோ-''அணி நுதற் குறுமகள்! |
|
தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல் |
|
செவ் வாய்ப் பைங் கிளி கவர, நீ மற்று |
|
எவ் வாய்ச் சென்றனை, அவண்?'' எனக் கூறி, |
5 |
அன்னை ஆனாள் கழற, முன் நின்று, |
|
''அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை |
|
அறியலும் அறியேன்; காண்டலும் இலனே; |
|
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து, |
|
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன்'' என நினைவிலை |
10 |
பொய்யல், அந்தோ! வாய்த்தனை? அது கேட்டு, |
|
தலை இறைஞ்சினளே அன்னை; |
|
செலவு ஒழிந்தனையால், அளியை நீ, புனத்தே? |
உரை |
|
சிறைப்புறமாகத்தோழி சொல்லியது.-கொள்ளம்பக்கனார்
|
|
வண்ணம் நோக்கியும், மென் மொழி கூறியும், |
|
''நீ அவண் வருதல் ஆற்றாய்'' எனத் தாம் |
|
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர், இன்றே, |
|
நெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை, |
5 |
செங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி, |
|
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது, |
|
கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின் |
|
இன் புனிற்று இடும்பை தீர, சினம் சிறந்து, |
|
செங் கண் இரும் புலிக் கோள் வல் ஏற்றை |
10 |
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும் |
|
அருஞ் சுரம் இறப்ப என்ப; |
|
வருந்தேன்-தோழி!-வாய்க்க, அவர் செலவே! |
உரை |
|
பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயது.-கள்ளம்பாளனார்
|
|
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி, |
|
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி, |
|
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற, |
|
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப, |
5 |
அலந்தனென் வாழி-தோழி!-கானல் |
|
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல் |
|
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ, |
|
நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு |
|
செலவு அயர்ந்திசினால், யானே; |
10 |
அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே! |
உரை |
|
தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது; சிறைப்புறமாகச் சொல்லியதூஉம் ஆம்.- உலோச்சனார்
|
|
நகை நன்கு உடையன்-பாண!-நும் பெருமகன்: |
|
''மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி, |
|
அரண் பல கடந்த முரண் கொள் தானை |
|
வழுதி, வாழிய பல! எனத் தொழுது, ஈண்டு |
5 |
மன் எயில் உடையோர் போல, அஃது யாம் |
|
என்னதும் பரியலோ இலம்'' எனத் தண் நடைக் |
|
கலி மா கடைஇ வந்து, எம் சேரித் |
|
தாரும் கண்ணியும் காட்டி, ஒருமைய |
|
நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்ச, |
10 |
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக் |
|
கதம் பெரிது உடையள், யாய்; அழுங்கலோ இலளே. |
உரை |
|
தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது.-கடுவன் இளமள்ளனார்
|
|