|
|
உள்ளார்கொல்லோ-தோழி!-கொடுஞ் சிறைப் |
|
புள் அடி பொறித்த வரியுடைத் தலைய |
|
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற, |
|
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின், |
5 |
வேழ வெண் பூ விரிவன பலவுடன், |
|
வேந்து வீசு கவரியின், பூம் புதல் அணிய, |
|
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு |
|
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய, |
|
எல்லை போகிய பொழுதின் எல் உற, |
10 |
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்து, |
|
பல் இதழ் உண்கண் கலுழ, |
|
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே? |
உரை |
|
தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.-மதுரைப் பெருமருதனார்
|
|
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப, |
|
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ, |
|
பொன் எனக் கொன்றை மலர, மணி எனப் |
|
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல, |
5 |
கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து |
|
செல்க-பாக!-நின் தேரே: உவக்காண்- |
|
கழிப் பெயர் களரில் போகிய மட மான் |
|
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட, |
|
காமர் நெஞ்சமொடு அகலா, |
10 |
தேடூஉ நின்ற இரலை ஏறே. |
உரை |
|
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது.-விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்
|
|
தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய |
|
துறுகல் அயல தூ மணல் அடைகரை, |
|
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப் |
|
பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில், |
5 |
''கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு |
|
அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!'' என, |
|
கையறத் துறப்போர்க் கழறுவ போல, |
|
மெய் உற இருந்து மேவர நுவல, |
|
இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற் |
10 |
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின், |
|
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே? |
உரை |
|
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.-காமக்கணிப் பசலையார்
|
|
விழுந்த மாரிப் பெருந் தண் சாரல், |
|
கூதிர்க் கூதளத்து அலரி நாறும் |
|
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல் |
|
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் |
5 |
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ- |
|
துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய் |
|
தணியுமாறு இது'' என உரைத்தல் ஒன்றோ- |
|
செய்யாய்: ஆதலின் கொடியை-தோழி!- |
|
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த |
10 |
செயலை அம் தளிர் அன்ன, என் |
|
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே. |
உரை |
|
அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம் புக்கது.-கூற்றங்குமரனார்
|
|
நகையாகின்றே-தோழி!-''தகைய |
|
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை |
|
மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ, |
|
துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி, |
5 |
ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல், |
|
தெளி தீம் கிளவி! யாரையோ, என் |
|
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?'' என, |
|
பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி, |
|
தான் நம் அணங்குதல் அறியான், நம்மின் |
10 |
தான் அணங்குற்றமை கூறி, கானல் |
|
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி, |
|
பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே |
உரை |
|
குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது.-அல்லங்கீரனார்
|
|
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்; |
|
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்; |
|
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை, |
|
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்; |
5 |
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி, |
|
செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர், |
|
வருவர் வாழி-தோழி!-புறவின் |
|
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ, |
|
இன் இசை வானம் இரங்கும்; அவர், |
10 |
''வருதும்'' என்ற பருவமோ இதுவே? |
உரை |
|
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது.-காப்பியஞ் சேந்தனார்
|
|
தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக் |
|
கொன்ற யானைச் செங் கோடு கழாஅ, |
|
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி, |
|
எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக் |
5 |
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ |
|
நல்காய்ஆயினும், நயன் இல செய்யினும், |
|
நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல் |
|
விருந்து இறைகூடிய பசலைக்கு |
|
மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே! |
உரை |
|
''நீட்டியாமை வரை'' எனத் தோழி சொல்லியது.-பரணர்
|
|
''சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ, |
|
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப, |
|
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல் |
|
கார் வரு பருவம்'' என்றனர்மன்-இனி, |
5 |
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர், |
|
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும் |
|
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும் |
|
இன மயில் மடக் கணம் போல, |
|
நினை மருள்வேனோ? வாழியர், மழையே! |
உரை |
|
பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது.-காசிபன் கீரனார்
|
|
இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை |
|
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும், |
|
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண் |
|
பொன்னின் அன்ன நறுந் தாது உதிர, |
5 |
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல் |
|
வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ, |
|
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத் |
|
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண், |
|
மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி, |
10 |
அம்பல் மூதூர் அலர் எழ, |
|
சென்றது அன்றோ, கொண்கன் தேரே? |
உரை |
|
வரைவிடை மெலிந்தது.-உலோச்சனார்
|
|
நகுகம் வாராய்-பாண!-பகுவாய் |
|
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில் |
|
தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன் |
|
பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு |
5 |
காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன் |
|
முயங்கல் விருப்பொடு குறுகினேமாக, |
|
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் |
|
நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து, |
|
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, |
10 |
''யாரையோ?'' என்று இகந்து நின்றதுவே! |
உரை |
|
புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது.-மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
|
|