தூற்றிய பழிச்சொல்லால் அன்னை இல்வயிற்செறித்ததும் தலைவி நலன் பசலையாலுண்ணப்பட்டழிவதும் அறிவுறுத்துவாளாய்த் "தலைவன் தொடர்பானது இற்செறித்தலால் இப்படிப் பசலையாகியழியக் கடவது தானோ" வென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்பதன்கண் வகையின்பாற் படுத்துக.
| உரவுக்கடல் உழந்த பெருவலைப் பரதவர் |
| மிகுமீன் உணக்கிய புதுமண லாங்கண் |
| கல்லென் சேரிப் புலவற் புன்னை |
| விழவுநாறு விளங்கிணர் வியந்துடன் கமழும் |
5 | அழுங்க லூரோ அறனி்ன் றதனால் |
| அறனில் அன்னை யருங்கடிப் படுப்பப் |
| பசலை யாகி விளிவது கொல்லோ |
| புள்ளுற வொசிந்த பூமயங் கள்ளற் |
| கழிச்சுரம் நிவக்கும் இருஞ்சிறை இவுளி |
10 | திரைதரு புணரியிற் கழூஉம் |
| மலிதிரைச் சேர்ப்பனொ டமைந்தநந் தொடர்பே. |
(சொ - ள்.) உரவுக் கடல் உழந்த பெருவலைப் பரதவர் - வலிமையுடைய கடலிலே சென்று மீன் பிடித்தலில் வருந்திய பெரிய வலைகளையுடைய பரதவர்; மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் - மிக்க மீன்களைக் காயப் போகட்ட புதிய மணற் பரப்பாகிய அவ்விடத்து; கல்லென் சேரி புலவல் புன்னை - கல்லென வொலிக்குஞ் சேரியை யடுத்த புலவு நாற்றத்திடத்துள்ள புன்னையின்; விழவுநாறு விளங்கு இணர் உடன் விரிந்து கமழும் அழுங்கல் ஊர் - விழாவுக்குரிய மணமுடைய விளங்கிய பூங்கொத்து ஒருசேர விரிந்து மணங் கமழா நிற்கும் அலரெடுக்கின்ற பேரொலியையுடைய இவ்வூரோவெனில்; அறன் இன்று - அறமுடையதில்லை; அதனால் புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் கழிச் சுரம் நிவக்கும் இருஞ்சிறை இவுளி - அதனால் புட்கள் வந்திருத்தலா லுதிர்ந்த பூக்கலந்த சேற்றினையுடைய கழியாகிய இடத்தின் மீதோடும் தேரிற் பூட்டிய பெரிய பிணிப்பையுடைய குதிரைகள்; திரை தரு புணரியின் கழூஉம் மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பு -அலையெழுந்து வரும் கடனீராலே கழுவப்படுகின்ற மிக்க கடற் சேர்ப்பனொடு பொருந்திய நமது தொடர்ச்சியானது; அறன் இல் அன்னை அருங் கடிப்படுப்பப் பசலையாகி விளிவதுகொல் - அறனில்லாத அன்னை இற்செறித்து