(து - ம்.) என்பது, தலைவி புதல்வனைப் பெறுங்காலத்துப் பரத்தையிற் பிரிந்த தலைவன், அவள் நெய்யாடியபின் வந்து புலவிநீக்க வேண்டிப் பாணனை விடுப்ப அப்பாணனை நோக்கித் தலைவன் ஏதிலாளனாயினான். காதற்பரத்தை மனைவியேயென்றிவ்வூரறிந்துவிட்டது இனி மாறாது; ஆதலின், அதனை மறைத்து ஈண்டுக் கூறதொழியெனத் தலைவி புலந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை "அவனறிவு ஆற்றவும் அறியு மாகலின்" என்னும் நூற்பாவினுள் (தொல்-கற்- 6.) வாயிலின் வரூஉம் வகை என்பதன்கண் அமைத்துக்கொள்க.
| வடிக்கதிர் திரித்த வன்ஞாண் பெருவலை |
| இடிக்குரல் புணரிப் பௌவத் திடுமார் |
| நிறையப் பெய்த அம்பி காழோர் |
| சிறையருங் களிற்றின் பரதவர் ஒய்யுஞ் |
5 | சிறுவீ ஞாழல் பெருங்கடற் சேர்ப்பனை |
| ஏதி லாளனும் என்ப போதவிழ் |
| புதுமணற் கானல் புன்னை நுண் தாது |
| கொண்டல் அசைவளி தூக்குதொறுங் குருகின் |
| வெண்புற மொசிய வார்க்குந் தெண்கடல் |
10 | கண்டல் வேலிய ஊர் அவன் |
| பெண்டென அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே. |
(சொ - ள்.) வடிக் கதிர் திரித்த வன் ஞாண் பெருவலை இடிக்குரல் புணரிப் பௌவத்து இடுமார் - திருத்தமாகச் செய்யப்பட்ட