| வாங்குமடற் குடம்பைத் தூங்கிருள் துவன்றும் |
| பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பைக் |
5 | கானல் ஆயமொடு காலைக் குற்ற |
| கட்கமழ் அலர தண்ணறுங் காவி |
| அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ |
| வரிபுனை சிற்றில் பரிசிறந்து ஓடிப் |
| புலவுத்திரை உதைத்த கொடுந்தாள் கண்டல் |
10 | 1 செம்பேர் இரணை அலவற் பார்க்குஞ் |
| சிறுவிளை ஆடலும் அழுங்க |
| 2 நினக்குப் பெருந்துயரம் ஆகிய நோயே. |
(சொ - ள்.) தோழி வாழி - தோழீ வாழி!; இருங் கழி இரை ஆர் குருகின் நிரைப் பறைத் தொழுது - கரிய கழியின் கணுள்ள மீனாகிய இரைகளைத் தின்ற குருகுகளின் நிரையாகிய பறவைக் கூட்டம்; வாங்கு மடல் குடம்பைத் தூங்கு இருள் துவன்றும்-வளைந்த பனை மடலின் கண்ணே கட்டிய குடம்பைகளில் நிறைந்த இருட்பொழுது நெருங்கியுறையாநிற்கும்; பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை - பனை மரங்கள் உயர்ந்த வெளிய மணற்கொல்லையைச் சூழ்ந்த; கானல் ஆயமொடு காலை குற்ற கள்கமழ் அலர தண் நறுங் காவி அம்பகை நெறித்தழை அணி பெறத் தைஇ - கானலிடத்து நின் ஆயத்தாரோடு காலையிலே சென்று கொய்து கொணர்ந்த தேன்மணம் வீசும் மலரையுடைய ஈரிய நறிய நெய்தலின் அழகிய ஒன்றோடொன்று மாறுபட்ட நெறிப்பையுடைய தழையை அழகு பொருந்த உடுத்து; வரிபுனை சிற்றில் பரிசிறந்து ஓடி - கோல மிடுதலையுற்ற சிற்றில் புனைந்து சிறப்ப விரைந்தோடி விளையாடி; புலவுத் திரை உதைத்த கொடுந்தாள் கண்டல் செம் பேர் இரணை அலவன் பார்க்கும் சிறுவிளையாடலும் - புலவு நாற்றத்தையுடைய அலைமோதிய வளைந்த அடியையுடைய கண்டல் மரத்து வேரின் கீழாகச் செல்லுகின்ற சிவந்த பெரிய இரட்டையாக நெருங்கியிருக்கின்ற ஞெண்டுகளை நோக்கி மகிழாநிற்குஞ் சிறிய விளையாட்டும்; அழுங்க நினக்குப் பெருந்துயரம் ஆகிய நோய் உரையாய் - இல்லையாம்படி வருத்தம் எய்துமாறு நினக்குத் தானுற்ற பெரிய துயரமாகிய நோயை நீ கூறாய்! எ - று.
(வி - ம்.) நிரைப்பறைக் குருகின் தொழுதியென மாறி நிரையாகப் பறத்தலையுடைய குருகின் தொழுதியெனவுமாம். நெறிசுருள். தைஇ-உடுத்து. வரி - வரித்தல்; கோலமிடுதல். இரணை - இரண்டு; ஈண்டு ஆணும் பெண்ணுமாகிய இரண்டு ஞெண்டுகள்.
(பாடம்) 1. | சேர்ப்பேர் ஈரளை. 2. | நினைக்குறு. | |