| எறிபொற்1 பிதிரிற் சிறுபல் காய |
| வேங்கை வீயுகு மோங்குமலைக் கட்சி |
| மயிலறி பறியா மன்னோ |
| பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே |
(சொ - ள்.) ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த பகழி அன்ன சே அரி மழைக்கண் நல்ல பெருந்தோளோயே - தினைப் புனங்காவலையுடைய மழவர் ஆண்டுத் தின்றழிக்க வந்த பன்றி முதலாய விலங்குகளை யெய்து கொன்று மீட்டும் அவற்றினின்று பறித்தெடுத்த அம்புபோன்ற செவ்வரி பரந்த குளிர்ச்சியையுடைய கண்ணையும், நல்ல பெரிய தோளையும் உடையாய்!; கொல்லன் எறிபொன் பிதிரின் சிறுபல்காய வேங்கை வீ உகும் - கொல்லனது உலைக்களத்து அடிக்கும் இரும்பின் பொறி சிதறுமாறு போலச் சிறிய பலகாயையுடைய வேங்கையின் மலர்கள் உதிர்கின்ற; ஓங்கு மலைக்கட்சி - உயர்ந்த மலையினுள்ள கூட்டிலிருக்கும்; மயில் அறிபு பைம்புறக் கிளி அறியா - மயில்கள் தாம் அறிதலைப் பசிய புறத்தினையுடைய கிளிகள் அறியாவாய்; பயில் குரல் கவரும் - நெருங்கிய தினைக் கதிர்களைக் கவர்ந்து போகா நின்றன. அதனால் அக்கதிர்களும் அழிந்துபோகின்றன காண்; எழா அய்! அவற்றை ஓட்டவேண்டிய நீ இவ்விடத்திருந்தும் எழுந்தாயல்லை! ஆகலின் எழில் நலந்தொலைய நொதுமலர் தலை அழா. அங்ஙனம் எழாதிருப்பினும் நின் அழகிய நலமெல்லாங் கெடும்படியாக அயலாரிருக்கும் இவ்விடத்து அழாதிருத்தலையேனுஞ் செய்வாயாக!; எ - று.
(வி - ம்.) பிதிர் - பொறி. பிதிர்போல வீயுகுமெனக் கூட்டுக. கட்சி - கூடு. பயிலல் - நெருங்கல். மன் - கழிவு. அரத்தந் தோய்ந்த பகழி கண்ணுக் குவமை.
அலரெழுமாதலின் அழாதி யென்றாள். இங்ஙனம் அழிவனவற்றைத் தமரறியின் நின்னைக் காவலுக்கு விடாரெனப் புணர்ச்சி முட்டுப்பாடு கூறுவாள் எழுந்தாயல்லை யென்பதாற் குறிப்பித்தாள். ஒரு சிலம்பனை மயக்கிப் பாய்ந்து மீண்ட கண்ணையுடையா யென்பாள் மாவீழ்த்துப் பறித்த பகழிபோன்ற கண்ணினையென உவமை முகத்தாற் கூறினாள்.
இறைச்சி :- :- வேங்கைமலருதிரப் பெற்ற கூட்டிலிருக்கும் மயில் தினைக்கதிர்களைக் கிளிகள் கொண்டுபோவதனை யறிந்திருந்தும், 'நாம் கொய்துகொண்டுபோவதனை அம்மயில் அறியாவாகும்' என்று கிளிகள் கருதிக் கவர்ந்தேகுதல்போல அன்னை பலகாலுந் தூண்டியதனால் நின்னைக் காவல் செய்துறையும் யான் நின்களவொழுக்கத்தை யறிந்து வைத்தும் 'யான் அறிந்திலேன்' என நீ கருதி இதனை மறைத்தொழுகா நின்றாய் என்றதாம். மறைத்துக்கூறியொழுகுதல்; சுனையாடியதாலே