பக்கம் எண் :


277


ஒல்லாளென்றாள். தான் குற்றேவல் மகளாதலின், அவள் கருதியவழி யொழுகுமியல்பினேனென்பாள், ஒழியெனவல்லமாயினமென்றாள், நீ பாக்கம்புகுந்தனை யென்பதறிவளேல் இரவிடைமுயங்கி மகிழ்தலுமாகுமென்றுகருதி எழுகவெனுமுன் வருவளாதலின் தேர் பாக்கத்து அல்குவதாக என்றாள். எதிர்கொள்ளுமாறு வருதல் வரைந்தாலன்றி இன்மையின் வரைவுகடாயதாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) 'உரவுத்திரை கொழீஇய' என்றும் பாடம். ஒழி என அல்லமாயினம் எனக் கண்ணழித்துக் கொள்க.

(159)
  
    திணை : குறிஞ்சி.

    துறை :இது, கழற்றெதிர்மறை.

    (து - ம்,) என்பது, பாங்கற்கூட்டத்துக், கற்றறிபாங்கன் தலைவனை 'நீ ஒருமடமகளாலே நின்னுள்ளமழிதலின் நினக்கு நயனும், நண்பும், நாணும், பயனும் பண்பும், பிறவுமமைந்திலவாலோ' வென்றாற்கு அவன் 'என்னெஞ்சினுள்ளாளாகிய இவ்வொருத்தியினது கண்ணைநோக்குமுன் நீ கூறியவெல்லாம் உடையேனாயிருந்தேன் கா'ணென அழிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்" (தொல். கள. 11) என்னும் விதிகொள்க.

    
நயனும் நண்பும் நாணும்நன்கு உடைமையும் 
    
பயனும் பண்பும் பாடறிந் தொழுகலும் 
    
1நும்மினும் உடையேன் மன்னே கம்மென 
    
எதிர்த்த தித்தி ஏரிள வனமுலை 
5
விதிர்த்துவிட் டன்ன அம்நுண் சுணங்கின் 
    
ஐம்பால் வகுத்த கூந்தல் செம்பொன் 
    
திருநுதற் பொலிந்த தேம்பாய் ஓதி 
    
முதுநீர் இலஞ்சி பூத்த குவளை 
    
எதிர்மலர்ப் பிணையல் அன்னவிவள் 
10
அரிமதர் மழைக்கண் காணா ஊங்கே. 

    (சொ - ள்.)(கம்மென?) எதிர்த்த தித்தி ஏர் இள வனமுலை விதிர்த்துவிட்டு அன்ன அம் நுண் சுணங்கின் - மேன்மேலே தோன்றிய தித்தியையும் எழுச்சியையுடைய இளைய அழகிய கொங்கையின்மேலே அள்ளித் தெளித்தாற் போன்ற அழகிய நுண்ணிய தேமலையும்; ஐம்பால் வகுத்த செம்பொன் திருநுதல் பொலிந்த தேம் பாய் கூந்தல் ஓதி இவள் - ஐம் பகுதியாகப்

  
 (பாடம்) 1. 
நும்மினும் அறிகுவேன்.