பக்கம் எண் :


339


     (இ - ம்.) இதற்கு " வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதி கொள்க.

    
பங்குசெறிந் தன்ன பல்கதிர் இடையிடைப் 
    
பால்முகந் தன்ன பசுவெண் ணிலவின் 
    
மால்பிடர் அறியா நிறையுறு மதியஞ் 
    
சால்புஞ் செம்மையும் உடையை ஆதலின் 
5
நிற்கரந்து உறையும் உலகம் இன்மையின் 
    
எற்கரந் துறைவோர் உள்வழி காட்டாய் 
    
நற்கவின் இழந்தவென் தோள்போற் சாஅய்ச் 
    
சிறுகுபு சிறுகுபு செரீஇ 
    
அறிகரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே. 

    (சொ - ள்.) பங்கு செறிந்து அன்ன பல் கதிர் இடை இடைப் பால் முகந்து அன்ன பல வெள் நிலவின் - பல கூறுகள் ஒன்றாகச் செறிந்தாற் போன்ற பலவாய கதிர்களின் இடையே இடையே பாலை முகந்து வைத்தாற்போன்ற குளிர்ச்சியையுடைய வெளிய நிலாவினையுடைய: மால் பிடர் அறியா நிறை உறு மதியம் - மேகத்தின் பிடர் மேலே தோன்றிப் பிறரால் அறியப்படாத எல்லாக் கலைகளும் நிறைவுற்ற திங்களே!; சால்பும் செம்மையும் உடையை ஆகலின் - நீதானும் நிறைவும் நேர்மையும் உடையை ஆதலானும்; நின் கரந்து உறையும் உலகம் இன்மையின் - நினக்குத் தெரியாத வணணம் மறைந்து உறையும் உலகமொன்று இன்மையானும்; எற்கரந்து உறைவோர் உள் வழி காட்டாய் - எனக்குத் தோன்றாது மறைந்தொழுகும் எங்காதலர் இருக்கும் இடத்தினைக் காட்டுவாயாக! என்று இரந்து வேண்டினாள், அவள் அங்ஙனம் இரந்து வேண்டியும் திங்கள் விடை கூறிற்று இல்லையாகாலின் அதன்மேல் வெறுப்புற்று மீட்டும் அதனை நோக்கித் திங்களே!; அறி கரி பொய்த்தலின் - நீ அறிந்த அளவு சான்று கூறாது பொய்யை மேற்கோடல் காரணமாக; நல் கவின் இழந்த என் தோள் போல் சா அய் - நல்ல அழகிழந்த என் தோள்போல் வாட்டமுற்று; சிறுகுபு சிறுகுபு செரீஇ - நாடோறும் சிறுகிச் சிறுகிச் குறைந்து நின் விழிப்புலம் மறைபடுதலாலே; அது ஆகுமோ - நீ காட்டுவதுதான் இயலுமோ ? இயலாதன்றே; என்றாள், எ - று.

     (வி - ம்.) மால் - மேகம்; இனி மால்பு இடர் எனக்கொண்டு நிலத்தைக் குறிஞ்சியாக்கி எமர் தேனெடுக்கச் சமைத்த கண்ணேணியாலே இடரப்பட்டறியாத திங்களெனவுரைப்பினுமாம்; இதற்கு "வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத், தேனின் இறாலென ஏணி இழைத்திருக்குங், கானக நாடன்" (கலி. 39) என்றதனை நோக்கியும்