(து - ம்.) என்பது, பகற்குறிக்கண்வந்த தலைவனைத் தோழி சென்று வலங்கொண்டு எம்பெருமான் எமதுபாக்கத்து இரவுதங்கினையாகிச் செல்லுவையாயின் அதற்கடையாளமாக இப்பொழுது நின் மாலையைத் தருக என்றுவேண்டுவேமெனக் கூறுகின்றவள், உள்ளுறையால் அதனையும் மறுத்து வரைவுகடாவாநிற்பது.
(இ - ம்.) இதற்கும் முற்செய்யுள் விதியே யமையும்.
| சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம் |
| குளவித் தண்கயங் குழையத் தீண்டிச் |
| சோலை வாழை முணைஇ அயலது |
| வேரல் வேலிச் சிறுகுடி அலறச் |
5 | செங்கால் பலவின் தீம்பழ மிசையும் |
| மாமலை நாட தாமம் நல்கென |
| வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை | வீயுக விரிந்த முன்றில் | | கல்கெழு பாக்கத்து அல்கினை செலினே. | |
(சொ - ள்.) சிறுகண் பெருங்கை யானை ஈர் இனம் - சிறிய கண்ணையும் பெரிய கையையுமுடைய யானையின் களிறும் பிடியுமாகிய இரண்டினம்; குளவித் தண் கயம் குழையத் தீண்டிச் சோலை வாழை முணைஇ - மலைப்பச்சையைச் சுற்றிலுமுடைய நீர்ச்சுனையிலே மெய் துவளப் புணர்ந்து சோலையிலுள்ள மலைவாழையைத் தின்பதை வெறுத்து; அயலது வேரல் வேலிச் சிறுகுடி அலறச் செங்கால் பலவின் தீம்பழ மிசையும் மா மலை நாட - அயலிடத்துள்ளதாகிய மூங்கில் முள்ளான் மிடைந்த வேலியையுடைய சிறிய குடியின்கண்ணுள்ளார் அஞ்சியலறும்படி சிவந்த அடியையுடைய பலாவினது இனிய பழத்தைத் தின்னாநிற்கும் கரிய மலை நாடனே!; வாழிய - நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; எந்தை வேங்கை வீ உக விரிந்த முன்றில் - எந்தைக்குரிய, வேங்கை மலர் உதிரும்படி அகன்ற வாயிலையுடைய ; கல் கெழு பாக்கத்து அல்கினை செலின் - மலையிலே பொருந்திய பாக்கத்து