பக்கம் எண் :


424


     "எருவுஞ் செருவும்" (தொல். எழு. 260) என்ற சூத்திரத்துத் "தம்மொற்று மிகூஉம்" என உடம்பொடு புணர்த்துக் கூறலின் ஈண்டு "இடூ படூ" என உகரம் நீண்டு "குற்றெழுத் திம்பரும்" (தொல். எழு. 267) என்ற சூத்திரத்து "நிற்றல் வேண்டும் உகரக் கிளவி". என்றபடி உகரம் பெற்று இடூஉ படூஉம் என்றாயினமை அறிக. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) இது நிமித்தமும் பருவமும்காட்டி அவர் இன்னே வருகுவர் வருந்தற்க! எனத் தோழி ஆற்றுவித்தது. மீமிசைக் கரிய கிளையின்கண் என்றுமாம்.

(246)
  
     திணை : குறிஞ்சி.

     துறை ; இது, நீட்டியாமை வரையெனத் தோழி சொல்லியது.

     (து - ம்.) என்பது, களவொழுக்கத்தை மேற்கொண்டிருந்து மணம்புரியாது வினைமேற்செல்லுந் தலைமகனைத் தோழி நோக்கி, "நீ அருளினும் அருளாது விடினும் நின்வழி யொழுகுபவளாகிய தலைமகளது நெற்றியிலுண்டாகிய பசலை நோய்க்கு நீயே மருந்தென்பதறிந்து அப்பாற் செல்வாயாக" என்று செலவுமறுத்துக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, " ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும்" (தொல். கள. 23) என்னம் விதி கொள்க.

    
தொன்றுபடு துப்பொடு முரண்மிகச் சினைஇக் 
    
கொன்ற யானைச் செங்கோடு கழாஅ 
    
வழிதுளி பொழிந்த இன்குரல் எழிலி 
    
எஃகுறு பஞ்சிற் றாகி வைகறைக 
5
கோடுயர் நெடுவரை ஆடும் நாடநீ 
    
நல்கா யாயினும் நயனில செய்யினும் 
    
நின்வழிப் படூஉமென் தோழி நன்னுதல் 
    
இருந்திறை கூடிய பசலைக்கு 
    
மருந்துபிறி தின்மைநன் கறிந்தனை சென்மே. 

     (சொ - ள்.) தொன்றுபடு துப்பொடு முரண்மிகச் சினைஇக் கொன்ற யானைச் செங் கோடு கழாஅ - முதிர்ந்த வலியுடனே பகை மிகுதலாலே சினந்து புலியைக் கொன்ற யானையின் சிவந்த தந்தம் கழுவும்படி; வழி துளி பொழிந்த இன் குரல் எழிலி எஃகு உறு பஞ்சிற்று ஆகி - வீழ்கின்ற மழையைப் பெய்த இனிய முழக்கத்தையுடைய மேகம் வில்லால் எறியப்பட்ட பஞ்சு போல் ஆகி; வைகறைக் கோடு உயர் நெடுவரை ஆடும் நாட - விடியற்காலத்திலே சிகரம் உயர்ந்த நெடிய மலையிலே இயங்காநிற்கும் நாட்டையுடையோனே!; நீ நல்காயாயினும் நயன் இல