(து - ம்.) என்பது, பொருள்வயிற்சென்ற தலைமகன் தலைவியை நினைந்து ஆற்றான் ஆகி 'என் நெஞ்சமானது தலைவிபாற் செல்லுவோமென்னாநின்றது, என் அறிவானது பொருள்முடித்துப் போவோமாதலின், அதற்குள் விரையாதே என்கின்றது. இவ்விரண்டும் பகை கொண்டதனால் இடையிலுள்ள என் உடம்பு அழியவேண்டுவதுதான் போலும்' என இடைச்சுரத்து அழுங்கிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட்டு அகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.
| புறந்தாழ்பு இருண்ட கூந்தற் போதின் |
| 1 நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண் |
| உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம் |
| செல்லல் தீர்க்கஞ் செல்வாம் என்னுஞ் |
5 | செய்வினை முடியாது எவ்வஞ் செய்தல் |
| எய்யா மையோடு இளிவுதலைத் தருமென |
| உறுதி் தூக்கத் தூங்கி அறிவே |
| சிறிதுநனி விரையல் என்னும் ஆயிடை |
| ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய |
10 | தேய்புரிப் பழங்கயிறு போல |
| வீவது கொல்என் வருந்திய வுடம்பே. |
(சொ - ள்.) நெஞ்சம் புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின் நிறம் பெறும் ஈர் இதழ் பொலிந்த உண்கண் - என் நெஞ்சமானது புறத்தே தாழ்ந்து இருண்ட கூந்தலையும் நெய்தல் மலர் போன்ற நிறம் விளங்கிய ஈரிய இமைபொருந்திய மையுண்ட கண்ணையும் உடைய; உள்ளம் பிணிக்கொண்டோள் வயின் செல்வாம் செல்லல் தீர்க்கம் என்னும் - என் உள்ளத்தைப் பிணித்துப் பற்றிக்கொண்டவளிடத்து யாம் செல்வோம், சென்று அவளுடைய இன்னாமையைத் தீர்ப்போம் என்று கூறாநிற்கும்; அறிவு செய்வினை முடியாது எவ்வம் செய்தல் எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என - அப்பொழுது என் அறிவானது நாம் எடுத்த காரியத்தை முடிவுபெறப் போக்காமல் இடையில் இகழ்ந்து விட்டு விடுதலானது அறியாமையுடனே இகழ்ச்சியையும் கொடாநிற்கும் என; உறுதி தூக்கத் தூங்கி
(பாடம்) 1. | நிறங்கிளர் நிறையிதழ். |